கருவளையம் மற்றும் மங்கு சரும அழகைக் கெடுக்கிறதா? முகப் பொலிவை மேம்படுத்த டிப்ஸ்

Eye Dark Circles: கண்களுக்கு அடியிலும் சுற்றிலும் உள்ள கருவளையங்கள் அழகை மங்கச் செய்துவிடுகின்றன. இதற்கு மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள், பரம்பரை என பல காரணங்கள் உள்ளன

கருவளையங்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை செய்யாவிட்டால், முகத்தின் அழகைக் கெடுக்கும். இரசாயன அடிப்படையிலான மருந்துகளால் விரைவில் குணப்படுத்த முடியும். ஆனால் நமது சருமம் மிகவும் உணர்திறன் வாய்ந்தது. எனவே, வீட்டில் உணவுக்கு நாம் பயன்படுத்தும்  பொருட்களை வைத்தே முகம் மற்றும் கண்களுக்கு அருகில் உள்ள கருவளையங்களை அகற்றலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

 

1 /7

குளிர்ந்த தேநீர் பைகள் குளிர்ந்த தேநீர் பைகளின் உதவியுடன், கருவளையங்களை அகற்றலாம். தேநீர் பையை தண்ணீரில் ஊறவைத்து, சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அதன் பிறகு கண்களை மூடிக்கொண்டு அந்த டீ பேக்கை கருவளையத்தில் வைக்கவும்.இதை தொடர்ந்து செய்துவந்தால் அதன் பலன் தெரியும்.

2 /7

குளிர்ந்த பால் கருவளையங்களில் இருந்தும் நிவாரணம் தருகிறது. இது கண்கள் மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கும். குளிர்ந்த பாலை பருத்தி துணியில் தொட்டு, கண்களுக்கு அருகில் உள்ள கருவளையத்தில் தடவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

3 /7

கருவளையத்தைப் போக்க தக்காளி ஒரு சஞ்சீவினி போல் செயல்படுகிறது. சருமத்தை மென்மையாக்கும் தககளி, சருமத்தை மேம்படுத்தும் ஒரு அற்புதமான க்ளென்சிங் பொருள் என்று சொல்லலாம். ஒரு ஸ்பூன் தக்காளி சாற்றுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கண்களுக்கு அருகில் உள்ள கருவளையத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் தண்ணீரில் கழுவவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யவும். இது தவிர, தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம், இது கருவளையங்களை நீக்க உதவும்.

4 /7

பச்சை உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுக்கவும். உருளைக்கிழங்கு சாற்றை பருத்தி துணியில் நனைத்து கண்களை மூடி கருவளையத்தில் தடவவும். கண்கள் தவிர, சருமத்தில் கருப்பாக இருக்கும் இடத்தில் தடவி, காயவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகப்பொலிவு அதிகரிக்கும்.

5 /7

ஆரஞ்சு சாறு மூலம் கருவளையங்களையும் நீக்கலாம். சில துளிகள் ஆரஞ்சு சாறு மற்றும் கிளிசரின் கலந்து தடவினால், கருவளையம் படிப்படியாக குறைந்துவிடும். இது சருமத்திற்கு பொலிவையும் தருகிறது.

6 /7

வைட்டமின் ஈ, கருவளையத்தை போக்க உதவும். பாதாமில் உள்ள விட்டமின் ஈ சருமத்தின் தரத்தை மேம்படுத்தும். பாதாம் எண்ணெயை கருவளையங்களை போக்க பயன்படுத்தலாம். பாதாமை பாலில் ஊற வைத்து அரைத்து முகத்தில் பூசி காயவிட்டு கழுவி வந்தால் கருவளையங்கள் மங்கிப் போய், முகப் பொலிவு அதிகரிக்கும்.

7 /7

தர்பூசணி கருவளையங்களை பெருமளவு குறைக்க உதவுகிறது. இந்த பழத்தில் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது மற்றும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளது மற்றும் சருமத்தை மிருதுவாக்கும். இது நம் உடலில் நீர் சமநிலையை பராமரிக்கிறது. இயற்கையாகவே கருவளையப் பிரச்சனையிலிருந்து விடுபட உங்கள் அன்றாட உணவில் தர்பூசணிகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.