இன்னும் 24 மணி நேரத்தில் செவ்வாய் வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பாதகமான பலன்

அக்டோபர் 16ஆம் தேதி ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆனால் செவ்வாய் பகவான், புதன் பகவானை அதிபதியாக கொண்ட மிதுன ராசியில் நாளை செவ்வாய் பகவான் வக்ர பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளார். அதாவது பின்னோக்கி நகர உள்ளார். இந்த சூழ்நிலையில் நவம்பர் 13ஆம் தேதி செவ்வாய் பகவான் பின்னோக்கி நகர்ந்து மிதுனத்தில் இருந்து ரிஷப ராசிக்கு மாற உள்ளார். இந்த நேரத்தில் எந்தெந்த ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

1 /5

மேஷ ராசி: குடும்பத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். தொழில் வியாபாரத்தில் பல சவால்களை சந்திக்க நேரிடும். மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணம் சம்பாதிப்பதற்கான முயற்சிகள் தோல்வி அடையக் கூடும்.

2 /5

ரிஷப ராசி: ரிஷப ராசியில் இருக்க சுப பலன்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியின்மை, மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும். உங்களின் செலவு கணிசமாக அதிகரிக்கும்.

3 /5

மிதுன ராசி: உங்களின் ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்புள்ளது. உடல் நலத்தில் முழு கவனம் செலுத்துவதோடு உணவு விஷயத்திலும் கவனம் தேவை. திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். 

4 /5

​துலாம் ராசி: செவ்வாய் கிரகத்தின் மோசமான விளைவுகளை உங்களின் வேலையில் தடைகள் உண்டாகும். இந்த நேரத்தில் எந்த ஒரு சூழ்நிலையையும் நீங்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டியது அவசியம்.

5 /5

​மீன ராசி: மீன ராசியினருக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறிய அளவிலான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருசக்கர வாகன பயன்பாட்டில் கவனம் தேவை.