பிபி முதல் சர்க்கரை வியாதி வரை... பல நோய்களை ஒழித்துக் கட்டும் சில சூப்பர் பானங்கள்

இன்றைய பிஸியான வாழ்க்கை, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, மக்கள் பல கடுமையான நோய்களுக்கு ஆளாகிறார்கள். அவற்றில் பிபி, நீரிழிவு, இதய நோய் போன்ற பிரச்சினைகள் பொதுவான பிரச்சனைகளாக மாறி விட்டன. 

நீரிழிவு, பிபி போன்ற நோய்களை குணப்படுத்த இயலாது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும். வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்த நோய்களைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

1 /8

ஆரோக்கியத்தை பராமரிக்கவும் நோய்களைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் மருந்துகளை சாப்பிடுவது அவசியம் என்றாலும், பல வீட்டு மற்றும் ஆயுர்வேத வைத்தியங்களையும் பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம். இந்நிலையில், பிபி முதல் சர்க்கரை வியாதி வரை பல நோய்களுக்கு மருந்தாக உள்ள பானங்களை அறிந்து கொள்ளலாம்.  

2 /8

இலவங்கப்பட்டை நறுமணத்தை கொடுக்கும் மசாலா. இதில் பல வகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடிப்பது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் எடையைக் குறைக்கவும் உதவும்.

3 /8

இஞ்சி நீர்: இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல், ஜீரண சக்திக்கும் பெயர் பெற்றது. இஞ்சி நீரைக் குடிப்பது குமட்டலில் இருந்து நிவாரணம் அளிக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது.  

4 /8

புதினா நீர் செரிமானத்திற்கு உதவுவதோடு தலைவலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது மட்டுமல்லாமல், இது உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்யும் மற்றும் கோடையில் உடலை குளிர்ச்சியாக வைக்க முற்றிலும் ஏற்றதாக கருதப்படுகிறது.

5 /8

தனியா நீர்: வைட்டமின் கே, சி மற்றும் ஏ ஆகியவற்றுடன் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த தனியா என்னும் கொத்தமல்லி விதை நீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை குறைத்து முதுமையை தடுக்கிறது. மேலும், உடல் எடை குறைப்பது முதல் செரிமானத்தை மேம்படுத்துவது வரை பல விஷயங்களில் பயனுள்ளதாக இருக்கும்.

6 /8

நீரிழிவு நோயாளிகளுக்கு வெண்டைக்காய் நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த, வெண்டைக்காய் நீர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதோடு, செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

7 /8

திப்பிலி நீர்: ஆயுர்வேத பண்புகள் காரணமாக, திப்பிலி பல உடல்நலப் பிரச்சனைகளில் பயனுள்ளதாக இருக்கிறது. திப்பிலி போட்டு கொதிக்க வைத்த நீரை குடிப்பது நுரையீரலை வலுப்படுத்தும். மேலும், செரிமானத்தை மேம்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.