கனவுகள் சுகமானவை என்றாலும் கனவுக்கான பலன்கள் என்ன தெரியுமா

Predictions of  Dream: கனவு காணுங்கள் என்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கருத்து மிகவும் பிரபலமானது. ஆனால், நாம் காணும் கனவுகளுக்கான பலன்கள் என்ன?

கனவுக்கான பலன்களால் ஈர்க்கப்பட்டு பகலில் கனவு கண்டால் அது பகல்கனவாய் பலிக்காமல் போய்விடும்.

மேலும் படிக்க | வாழ்க்கையில் சுவையை கூட்டும் உப்பு; வாஸ்து சாஸ்திரம் கூறுவது என்ன!

1 /5

கனவில் ஒரு வெள்ளை பாம்பைக் கண்டால் நல்லது. ஒரு வெள்ளை பாம்பு தோன்றினால், இந்த கனவு நிறைய செல்வத்தை அளிக்கிறது. நீங்கள் விரைவில் பணக்காரர் ஆவீர்கள் என்பது ஐதீகம்.

2 /5

கனவில் பழங்கள் கொண்ட மரத்தைப் பார்த்தால், அது மிகவும் நல்லது. பணம், மரத்தில் காய்த்துத் தொங்குவது போல, அதிகமாக வரும் என்று நம்பப்படுகிறது. 

3 /5

கனவில் நாணயம் அல்லது பணத்தைக் கண்டால், உங்கள் லாட்டரி அடிக்கப் போகிறது. அதாவது, திடீரென்று எங்கிருந்தோ நிறைய பணம் கொட்டப்போகிறது என்று பொருள்.

4 /5

கனவில் தாமரை மலரைக் காண்பது மிகவும் மங்களகரமானது. வெள்ளைத் தாமரை மலரைப் பார்ப்பது பெரும் செல்வத்தைப் பெறுவதற்கான அறிகுறியாகும். இது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தின் அறிகுறியாகும்.

5 /5

யானையைப் பார்ப்பது மிகவும் மங்களகரமானது. நிறைய பணம் வரவும் மரியாதையும் வரவிருக்கிறது என்பதை கனவில் வரும் யானை சொல்கிறது