அந்த நாள் ஞாபகம்: முதலாம் உலகப்போரின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

மூன்றாம் உலகப் போர் ஆரம்பம் ஆகிறதா என்ற கேள்வியையும் இது குறித்த ஊகங்களையும் நாம் இந்நாட்களில் தொலைக்காட்சி சேனல்களிலும் செய்தித்தாள்களிலும் பலமுறை கேட்டு வருகிறோம். ஆனால் உலகப் போர் என்பது அவ்வளவு சாதாரண விஷயமா? இதுவரை நடந்துள்ள உலகப்போர்களை பற்றி நீங்கள் கண்டறிந்தால் அந்த தகவல்கள் உங்களுக்கு பல விந்தையான விஷயங்களை தெரியப்படுத்தும். வரலாற்றில் இடம்பெற்ற உலகப்போரின் சில மறக்க முடியாத புகைப்படங்களை இங்கே காணலாம். 

1 /6

போஸ்னியாவின் தலைநகரான சரேவோவில் ஆஸ்திரிய பேரரசரின் வாரிசான பேராயர் ஃபிரான்ஸ் ஃபிடெனாண்ட் படுகொலை செய்யப்பட்டதே முதலாம் உலகப் போரின் உடனடி காரணம் என கூறப்படுகிறது. இந்த போர் வரலாற்றில் மிக மோசமான மோதல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  

2 /6

முதலாம் உலகப் போரில் அமெரிக்கா $30 பில்லியனுக்கும் அதிகமாக செலவிட்டது. நவம்பர் 1918 வரை இந்தப் போரில் 8,528,831 பேர் இறந்தனர். இந்தப் போர் முடிந்த பிறகுதான் உலகம் முழுவதும் ஸ்பானிஷ் காய்ச்சல் பரவியது.

3 /6

இந்த ஆபத்தான போரில், 13 லட்சம் இந்திய ராணுவ வீரர்களில் 62 ஆயிரம் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், சுமார் 67 ஆயிரம் பேர் காயமடைந்தனர். இந்தியா 1,70,000 விலங்குகளையும் 37 லட்சம் டன் தானியங்களையும் போருக்கு அனுப்பியது.   

4 /6

ஆஸ்திரியா, ஹங்கேரி, இத்தாலி, பல்கேரியா உள்ளிட்ட பிற நாடுகள் பங்கேற்ற செண்டிரல் பவர் பிரிவை ஜெர்மனி வழிநடத்தியது. பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகள் நேச நாடுகளின் தரப்பில் இருந்து இணைந்தன. இந்தப் போரில் சுமார் 30 வகையான விஷ வாயுக்கள் வெளியாகின.

5 /6

ஜெர்மனி அதிகாரப்பூர்வமாக 1918 நவம்பர் 11 அன்று சரணடைந்தது. இதன் பிறகு போர் முடிவுக்கு வந்தது. நவம்பர் 11 ஆம் தேதி முதல் உலகப் போரின் கடைசி நாள் என்று கூறப்படுகிறது.  

6 /6

போரின் முடிவில், உலகின் 4 பெரிய பேரரசுகள் அழிந்தன. ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி (ஹாப்ஸ்பர்க்) மற்றும் உஸ்மானியா (உஸ்மானியப் பேரரசு) முற்றிலுமாக அழிக்கப்பட்டன.