நம் நாட்டில்தான் குழந்தைகளை பெற்றோர் தங்கள் இடையே படுக்க வைத்து உறங்க வைக்கும் பழக்கத்தை வைத்துள்ளார்கள். வெளிநாடுகளில் அப்படி இல்லை. இதற்கான காரணம் இதுதான்.
சிறுவர், சிறுமியர்களை தனியாக படுக்க வைக்க பக்குவப் படுத்துவது நல்லது. அந்த தனிமை அவர்களுக்கு மன வளர்ச்சியையும், மன முதிர்ச்சியையும் அளிக்கும்.
குழந்தைகளுக்கு உணவை ஊட்டி விடும் பழக்கத்தை மாற்றி, தட்டில் போட்டு தனியாக உண்ண பழக்கப்படுத்த வேண்டும். இதன் மூலம் தன் வேலையை தானே செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு தோன்றும்.
இரவில் தனியறையில் தூங்க பயப்படும் குழந்தைகளை, பெற்றோர் தங்கள் அறையிலேயே தனி கட்டிலில் தூங்க வைத்து பழக்கப்படுத்த வேண்டும்.
தாயின் தொடுதலோ, வாசனையோ, அரவணைப்போ இல்லாமல் உறங்கி பழகும் குழந்தை தனக்கு அடுத்தபடியாக பிறக்கும் குழந்தையை எதிரியாக பார்க்கும் நிலை இருக்காது.
பெற்றோர் குழந்தைகளிடம் இல்லை, முடியாது, கிடைக்காது என்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் பிடிவாதம் குறைந்து வாழ்கையின் எதார்த்த நிலை தெரிந்து குழந்தை வளர அது உதவியாக இருக்கும்.
Next Gallery