செல்ஃபியால் கோபம்; ரசிகரின் செல்போனை பிடுங்கிய அஜித்!

தேர்தலுக்காக வாக்களிக்க வந்த அஜித்துடன் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயற்சி செய்த போது செல்போனை பிடுங்கியதால் சிறுது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 6, 2021, 09:27 AM IST
செல்ஃபியால் கோபம்; ரசிகரின் செல்போனை பிடுங்கிய அஜித்!  title=

தமிழக சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் தங்கள் வாக்குகளை ஆற்றி வருகின்றனர். அதன்படி நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்கள்.

 அஜித் (Ajith) வாக்களிக்க வந்தபோது, அவருக்கு அருகில் காவல்துறையினர் வர சற்று தாமதமானது. அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி (Selfie) எடுக்க முன்வந்தார். அஜித் அவர்களைக் கோபமாக முறைக்கவே ரசிகர்கள் சிலர் திரும்பிச் சென்றார்கள். அப்போது இன்னொருபுறம் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க மொபைல் போனுடன் அவர் அருகில் வந்தார். அப்போது நடிகர் அஜித் அவருடைய போனை பறித்துவிட்டார். 

ALSO READ | TN Assembly Election 2021 Live Updates: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருடன் வாக்களித்தார்

இந்நிலையில் தற்போது இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தின் இந்தச் செயலால் ரசிகர் அதிர்ச்சியடைந்தார். மேலும் வாக்களிக்க (TN Assembly Election) நின்று கொண்டிருக்கும் போது, தனது பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை ரசிகரை அழைத்துக் கொடுத்துவிட்டார். அப்போது, இந்த இடங்களில் செல்ஃபி எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News