சிறுமியை அடித்துக்கொன்று ஆற்றில் வீசிய கொடூரம்; கள்ளக்காதலனுடன் தாய் கைது

சிறுமியின் உடலை சுடுகாட்டில் புதைக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் அதே பகுதியில் உள்ள புதுஆற்றில் சிறுமியின் உடலை வீசி எறிந்துவிட்டனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 20, 2021, 07:32 AM IST
சிறுமியை அடித்துக்கொன்று ஆற்றில் வீசிய கொடூரம்; கள்ளக்காதலனுடன் தாய் கைது title=

தஞ்சாவூர் கோரிகுளம் பகுதியை சேர்ந்தவர் ரங்கேஸ்வரன் மற்றும் விஜயலட்சுமி என்பவர். இவர்களுக்கு வித்யா (வயது 7), விக்னேஷ் (வயது 4) ஆகும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜயலட்சுமியின் கணவன் ரங்கேஸ்வரன் இறந்துள்ளார். 

கனவாம் இறந்து போதிய வருமானம் இன்றி தவித்த விஜயலெட்சுமிக்கு, அண்ணன் முறைகொண்ட அவரது உறவினர் வெற்றிவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. வெற்றிவேலுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

ALSO READ | பள்ளி மாணவரை அடித்துக் கொன்ற தாயின் கள்ளக் காதலன்

இந்நிலையில் இவர்களது இந்த உறவு தகாத முறையில் மாறியது. தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் அருகே உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தையொட்டி ஒரு கொட்டகையில் விஜயலட்சுமியையும், அவரது 2 குழந்தைகளையும் வெற்றிவேல் கடந்த 5 மாதங்களாக தங்க வைத்துள்ளார். மேலும் இவர்களது இந்த செயலுக்கு உறவினர்கள் அவர்களை கண்டித்துள்ளனர். 

நேற்று முன்தினம் இரவு வெற்றிவேல் குடிபோதையில் விஜயலட்சுமி தங்கியுள்ள கொட்டகைக்கு சென்று அவரை தாக்கியுள்ளார். தன் கண் எதிரே தாய் தாக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி வித்யா, வாசலிலுக்கு சென்று காப்பாற்றும்படி சத்தம்போட்டாள். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த வெற்றிவேல் சிறுமி வித்யாவை அடித்து கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலே சிறுமி உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் உடலை சுடுகாட்டில் புதைக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் அதே பகுதியில் உள்ள புதுஆற்றில் சிறுமியின் உடலை வீசி எறிந்துவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மக்கள் போலீசாருக்கு நேற்று காலை தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட சிறுமி வித்யாவின் உடலை புதுஆற்றில் வீசியது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து வெற்றிவேல், விஜயலட்சுமி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். புதுஆற்றில் வீசப்பட்ட சிறுமியின் உடல் இன்னும் கிடைக்கவில்லை. சிறுமியின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ | கள்ளக் காதலுக்கு தடையாக இருந்த கணவனுக்கு உணவில் விஷம் கலந்த மனைவி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News