தொடர் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

தொடர்மழை எதிரொலியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Last Updated : Nov 30, 2017, 08:54 AM IST
தொடர் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! title=

தொடர்மழை எதிரொலியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

இதனையடுத்து மாணவர்கள் நலன்கருதி 8 மாவட்ட பள்ளிகளுக்கும், 4 மாவட்ட கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Trending News