நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இஸ்ரோவிடம் இல்லை

நிலவை போல் மற்ற கிரகங்களையும் ஆராய்ச்சி செய்ய நேரடியாக அந்தந்த கிரகங்களுக்கு செல்லும் வகையில் ராக்கெட்மூலம் செல்லும் ரோவர்களை வடிவமைக்கபட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானி மோகன் குமார் தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 1, 2023, 08:02 PM IST
  • இஸ்ரோவின் சந்திராயன் 3 மிகப்பெரிய வெற்றி
  • அனைத்து கிரகங்களுக்கும் ராக்கெட் அனுப்ப திட்டம்
  • இப்போதைக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இல்லை
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இஸ்ரோவிடம் இல்லை title=

சந்திராயன் 3 சாதனை

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் வேந்தர் விசுவநாதன் தலைமையில் சந்திராயன் -3 வெற்றி குறித்து அதன் இயக்குநர் மோகனகுமார் மாணவர்களுக்கு விளக்கி கூறும் நிகழ்வும் கலந்துரையாடல் நடந்தது. இதில் இஸ்ரோ சந்திராயன் -3 இயக்குநர் விஞ்ஞானியுமான மோகனகுமார் பேசுகையில், சந்திராயன் மூன்று வெற்றி என்பது நமது மண்ணுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. ஜூலை மாதம் சந்திராயன் மூன்று  விண்ணில் ஏவப்பட்டது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் லேண்டெர் இறங்கியது. இவை பொண்ணு எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய வரலாற்று சாதனையாகும். சந்திராயன் மூன்று ஆர்பிட்டர் லேண்டர் ரோவர் வெற்றிகரமாக சென்று இறங்கியது.

மேலும் படிக்க | சென்னை தினமலர் அலுவலகத்தில் மலம் வீசிய தபெதிக!

நிலவில் லேண்டர்

மேலும், சந்திராயன் மூன்று நிலவின் தட்ப வெப்பநிலை இயல்பு நிலைகள் வாயுக்கள் கனிமங்கள் குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. சந்திராயன் மூன்று முழுவதும் நமது நாட்டு தயாரிப்பு இதற்காக பல்வேறு தொழிற்சாலைகள், வேதியல் தொழிற்சாலைகள் பெரிய பெரிய தொழிற்சாலை நிறுவனங்கள்  ஆகியவைகள் ஒத்துழைப்பு அளித்து பல்வேறு உபகரணங்களை அளித்தனர். மேலும் பலரின் ஒத்துழைப்பு காரணமாகவே இது வெற்றி பெற்றுள்ளது.  தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் தொழில்நுட்ப உதவியாளர்கள், சந்திராயன் மூன்று ஒவ்வொரு உதிரி பாகங்களையும் இயந்திரங்களையும் பல கட்ட ஆய்வுக்குப் பின்னரே பொருத்தினோம்.  சந்திராயன் மூன்று தற்போது நிலவில் உள்ள லேண்டர் மற்றும் ரோவர் தென் துருவத்தை ஆராய்ந்து வருகிறது.  அங்கு 14 நாட்கள் மட்டுமே சூரிய வெளிச்சம் இருக்கும். லேன்டர் மற்றும் ரோவர் கருவிகள் அந்த சூரிய வெளிச்சம் மூலம் சோலார் பேனலால் பேட்டரிக்கு ஆற்றல் பெற்று இயங்கி வருகிறது. 

மனிதர்களை அனுப்பும் திட்டம்

அதன் பிறகு கருவிகள் தானாக ஆப் ஆகிவிடும். மீண்டும் அங்கு சூரிய ஒளி கிடைத்தால் இக்கருவிகளை இயக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா? என முயற்சிப்போம். தற்போது தொடர்ந்து நிலவிலிருந்து பல்வேறு தகவல்களை சந்திராயன் மூன்று அனுப்பி வருகிறது. பல்வேறு ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறது. நிலவுக்கு மனிதர்கள் அனுப்பும் திட்டம் என்பது இந்தியாவிடம் தற்போது இல்லை. ஆனால்  தொடர்ந்து சந்திராயன் மூன்று போன்ற  விண்வெளி ராக்கெட்டுகள் மூலம் ஆராய்ச்சிகள் தொடர்வோம். நாம் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதாக இருந்தால் அவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம். அதற்காக  அவர்கள் விண்ணில் செல்லும்போது ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அவர்கள் எந்தவித சேதமும் இன்றி தப்பிக்கும் வகையில் புதிய வகையான ஏர் கிராப்டுகளை  வடிவமைக்க உள்ளோம்.

மற்ற கிரங்களுக்கு அனுப்ப திட்டம்

சந்திராயன் மூன்று போல் பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இது குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளிவரும். மேலும் நிலவைப்போல்  மற்ற கிரகங்களையும் ஆராய்ச்சி செய்ய என்னென்ன தொழில்நுட்பங்கள் வேண்டும்? அதற்காக என்னென்ன பணிகள் செய்ய வேண்டும்? என்பது குறித்தும்  ஆராய்ச்சி செய்து வருகிறோம்" என்று பேசினார். 

மேலும் படிக்க | 'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும்..’ விளாசிய உதயநிதி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News