சீமானுக்கு வாய்க்கொழுப்பு, வழக்குகள் தூசி தட்டப்படுகிறது - அமைச்சர் சேகர்பாபு

Seeman, Minister Sekarbabu News : சீமானுக்கு வாய்கொழுப்பு காரணமாக வரைமுறை இல்லாமல் பேசி வருகிறார், அவர் மீது கொடுக்கப்படும் புகார்களின் அடிப்படையில் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 13, 2024, 01:58 PM IST
  • சீமானுக்கு வாய்க்கொழுப்பு அடக்கப்படும்
  • அவர் மீது புகாரின் அடிப்படையில் வழக்கு
  • சென்னையில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சீமானுக்கு வாய்க்கொழுப்பு, வழக்குகள் தூசி தட்டப்படுகிறது - அமைச்சர் சேகர்பாபு title=

Minister Sekarbabu News Latest : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீமான் வாய்கொழுப்பு அதிகம் என்றும், அவர் வரைமுறை இல்லாமல் தலைவர்களை விமர்சித்துக் கொண்டிருப்பதாகவும், அது விரைவில் அடக்கப்படும் என்றும் எச்சரித்தார்.  அதாவது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி குறித்து கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சித்து வருகிறார். நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைதை கண்டித்து செய்தியாளர்களிடம் ஆவேசமாக அவர் பேசும்போது, கருணாநிதி என்ன இறைத்தூதரா?, புனிதரா? என்றெல்லாம் சரமாரியாக பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு தான் தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | புதுக்கோட்டை : என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி குடும்பத்தின் பகீர் புகார்

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், ஆந்திரா, கர்நாடகா, பெங்களூர், ஓசூர் போன்ற மாநிலங்கள் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்காக திருமழிசை துணைக்கோள் நகரத்தில் 350 கோடி மதிப்பீட்டில் புதிதாக பஸ் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது இந்த. பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பணிகள் எப்போது முடியும்?, எந்த அளவுக்கு பணிகள் முடிந்துள்ளது? என்பது குறித்து நீண்ட நேரம் அதிகாரியுடன் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, " திராவிட மாடல் ஆட்சியை எதிர்க்கின்ற அனைத்து கட்சியினருக்கும், எந்தவிதமான பொருளும், ஆயுதமும் கையில் கிடைக்கவில்லை. கையில் கிடைக்கின்ற ஆயுதங்களை எல்லாம் இந்த ஆட்சியாளர்கள் மீது தூக்கி எரிய முற்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி ஆட்சி காலத்தில் பாலும், தேனும் ஆறாய் ஓடியதா?. அவரது தலைவரின் கொடநாடு பங்களாவில் காவலரின் உயிரை கூட காப்பாற்ற முடியாத துப்புகெட்ட ஆட்சி நடத்தியவர் சட்டம், ஒழுங்கை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. 

சீமான் தொடர்ந்து வாய்க்கொழுப்போடு பேசி வருகிறார். அவரது உயரம் அவருக்கே தெரியவில்லை. கண்ணாடி கூண்டிலிருந்து கல் எரிந்து கொண்டிருக்கிறார். திமுக கற்கோட்டை திரும்ப தாக்க வேண்டும் என்று நினைத்தால் அவர் தாங்க மாட்டார். சீமான் மீது பொதுநல விரும்பிகள் புகார் கொடுத்து வருகின்றனர். சட்டப்படி சாத்திய கூறுகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதே பாட்டை பாடியதற்காக ஏற்கனவே சீமான் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துள்ளார். அதே வார்த்தையை மீண்டும் பயன்படுத்துகிறார் என்றால் அரசியல் பார்வை அவர் மீது திரும்ப வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார். தரையில் உருண்டு புரண்டாலும் சரி, தரையில் தவழ்ந்து வந்தாலும் திராவிட மாடல் ஆட்சிக்கு கலங்கம் விளைவிக்க முடியாது. சீமான் வாய்க்கொழுப்பிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | கிசுகிசு : தூதுவிடும் தோழி, பழைய பாசத்தால் கரையும் மாஜிக்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News