நாச்சியார் சர்ச்சை: நடிகை ஜோதிகா, இயக்குனர் பாலா மீது வழக்கு

பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் நாச்சியார் திரைப்படத்தில் நடிகை ஜோதிகா வசனம் பேசி உள்ளதாகக் கூறி அவர் மீதும், இயக்குனர் பாலா மீதும் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Last Updated : Nov 25, 2017, 04:43 PM IST
நாச்சியார் சர்ச்சை: நடிகை ஜோதிகா, இயக்குனர் பாலா மீது வழக்கு title=

பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் நாச்சியார் திரைப்படத்தில் நடிகை ஜோதிகா வசனம் பேசி உள்ளதாகக் கூறி அவர் மீதும், இயக்குனர் பாலா மீதும் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் நாச்சியார் திரைப்படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் வரும் நடிகை ஜோதிகா ஒருவரை விசாரணை செய்யும்போது ஆபாச வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கார் ஓட்டுநரான ராஜன் என்பவர் மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நேற்று பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் கோர்ட் நடுவர் சரவணபாபு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நவம்பர் 28-ம் தேதி இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டார்.

Trending News