தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி என்பதே இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

Last Updated : Jun 20, 2017, 12:24 PM IST
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி என்பதே இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் title=

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கலப்படமில்லாத தரமான உணவு பொருட்களை விற்பனை செய்வது குறித்து ஆலோசனை கூட்டம்  நடந்தது. அதில் கலந்துக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடந்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்வதாக தகவல் பரவியதால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 140-க்கும் மேற்பட்ட மாதிரிகள் எடுத்து 6 ஆய்வகங்களில் பரிசோதனை நடந்தது. ஆய்வில் பிளாஸ்டிக் அரிசி என்பது உறுதி செய்யப்படவில்லை. இதன் மூலம் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி என்பதே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம். 

தரமற்ற கலப்பட உணவு பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தால் பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News