ADMK EX Minister மணிகண்டன் தலைமறைவு - தனிப்படை அமைத்து போலீசார் தீவிரம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தேடும் பணியில் தமிழக போலீசார் (Tamil Nadu Police) ஈடுபட்டு உள்ளனர். அவரின் உறவினர் மற்றும் பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 2, 2021, 12:06 PM IST
  • அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தேடும் பணியில் தமிழக போலீசார்.
  • முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.
  • சென்னை நெற்குன்றத்தில் இருப்பதாக தமிழக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.
ADMK EX Minister மணிகண்டன் தலைமறைவு - தனிப்படை அமைத்து போலீசார் தீவிரம்! title=

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் (Former AIADMK minister) மணிகண்டன் மீது 36 வயது நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் பலாத்காரம் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து, சென்னை அடையார் மகளிர் காவல்நிலையத்தில், பாலியல் பலாத்காரம், மிரட்டல், பெண்ணின் அனுமதியின்றி கருச்சிதைவு மற்றும் காயத்தை ஏற்படும் வகையில் பெண்ணை தாக்கியது போன்ற ஐபிசி பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகை அளித்த தனது புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் (M Manikandan) தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்துக்கொள்வதாகக் கூறி 5 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்து வந்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் பல முறை உடலுறவில் ஈடுபட்டு 3 முறை கர்ப்பமாகி கருவை கலைத்தாகவும் குற்றசாட்டி உள்ளார். பல சந்தர்ப்பங்களில் தன்னைத் தாக்கியதாவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் நடிகை தெரிவித்துள்ளார்.

ALSO READ |  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் அதிரடி நீக்கம்!

இந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் அடையாறு (Chennai’s Adya Police Station) அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சரை அழைத்து காவல்துறையினர் விசாரிக்கவும் முடிவு செய்து, போலீசார் ராமநாதபுரம் சென்றனர். ஆனால் அங்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீடு பூட்டி உள்ளதாகவும், அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தேடும் பணியில் தமிழக போலீசார் (Tamil Nadu Police) ஈடுபட்டு உள்ளனர். அவரின் உறவினர் மற்றும் பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தேடும் பணியில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது அவர் சென்னை நெற்குன்றத்தில் இருப்பதாக தமிழக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளதால், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ALSO READ |  சினிமா நடிகை கொடுத்த பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News