மீனவர் பலி: உறவினர்கள் பேருந்தில் கல்வீசி தாக்கினர்

Last Updated : Jul 12, 2017, 12:19 PM IST
மீனவர் பலி: உறவினர்கள் பேருந்தில் கல்வீசி தாக்கினர் title=

ராமேஸ்வரம் அருகே அரசு பேருந்து மோதி மீனவர் ஒருவர் உயிரிழந்து விட்டார். இதனால் கோபம் அடைந்த உறவினர்கள் அதன்பிறகு அந்த வழியாக வந்த ராமேஸ்வரம்-கம்பம் பஸ்சை கல்வீசி தாக்கினர். மற்றொரு பஸ்சை தீயிட்டு கொளுத்தினர்.

தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜெகன் என்ற மீனவரே பேருந்து மோதி உயிரிழந்தவர். மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தங்கச்சிமடம் அருகே சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. 

அந்த இடத்திலேயே ஜெகன் உயிரிழந்தார். இதனால் கோபம் அடைந்த உறவினர்கள் தங்கச்சிமடம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் இருந்து வந்த மற்றொரு அரசுப்பேருந்து மீது கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைத்தனர். 

ஓட்டுநரை தாக்கியதுடன், பேருந்துக்கு தீ வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த போராட்டக்காரர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Trending News