தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை: ஆய்வு மேற்கொண்ட மூன்று அமைச்சர்கள்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பூர்வாங்க பணிகள் தொடங்க உள்ள இடத்தில் விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்!  

Last Updated : Jun 22, 2018, 12:39 PM IST
தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை: ஆய்வு மேற்கொண்ட மூன்று அமைச்சர்கள்! title=

மதுரை மாவட்டம் தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் ரூ.15,000 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததையடுத்து, மருத்துவமனை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்க உள்ள இடத்தில் விஜபாஸ்கர், செல்லூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்!

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது,,,! எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் தொடங்கும் எனவும், அதற்காக நவீன மருத்துவ வசதிகள், மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் கருத்து கூறியுள்ளார். 

மேலும், தண்ணீர் வழங்குவது தொடர்பாக குடிநீர் வாரியம் உரிய ஒப்புதல் அளித்ததையடுத்து, அங்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அணுகு சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

Trending News