மனைவி மீது ஆசிட் ஊற்றிய கொடூர கணவன்!

பெண்களுக்கு எதிரான அநீதிகளும் அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. 

Last Updated : Oct 9, 2021, 04:37 PM IST
  • ஒரு கொடூரன் குடும்பம் நடத்த மனைவி வராத ஆத்திரத்தில் ஆசிட் ஊற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • ஆத்தரமடைந்த முருகன் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை எடுத்து, தமிழரசி முகத்தில் வீசியுள்ளார்.
மனைவி மீது ஆசிட் ஊற்றிய கொடூர கணவன்! title=

தண்டையார்பேட்டை: பெண்களுக்கு எதிரான அநீதிகளும் அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. அதுபோல் இங்கு ஒரு கொடூரன் குடும்பம் நடத்த மனைவி வராத ஆத்திரத்தில் ஆசிட் ஊற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முருகன் (41). பெயின்டரான இவர், தனது அக்கா மகள் தமிழரசியை (37) திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதிக்கு, 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், தமிழரசி தனது கணவரை பிரிந்து, மகள்களுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

acid

கணவனை பிரிந்து சென்ற தமிழரசி குடும்ப செலவுகளுக்காக தண்டையார்பேட்டையிலுள்ள  ஏ.இ.கோயில் தெருவில் சொந்தமாக கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை தமிழரசி நடத்தி வரும் இந்த கடைக்கு வந்த முருகன்,  நாம் சேர்ந்து வாழலாம் என மனைவியிடம் கூறியுள்ளார்.  ஆனால்,அவரின் அழைப்பை மறுத்து தமிழரசி அதற்கு மறுத்துள்ளார். இதனால் ஆத்தரமடைந்த முருகன் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை எடுத்து, தமிழரசி முகத்தில் வீசியுள்ளார். இந்த ஆசிட் வீச்சில் பலத்த காயமடைந்த அவர் அலறி துடித்தார்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.  இதனிடையே இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிந்து, முருகனை கைது செய்தனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும்,பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  எவ்வளவு தான் சட்டதிட்டங்கள் கொண்டு வந்தாலும் இது போன்ற கயவர்களால் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடந்து கொண்டு இருப்பது பெரும் வேதனையான ஒன்று.

ALSO READ 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு எடுத்தால் நடவடிக்கை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News