மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் அப்பல்லோ டாக்டர்கள் இன்று விளக்கம் அளித்தனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் அப்பல்லோ டாக்டர்கள் இன்று விளக்கம் அளித்தனர்.
சென்னை: ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான் என்று அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல் விளக்கம் அளித்துள்ளனர்.
ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் குறித்து வந்த வதந்திகள் பரவி வருவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெயலலிதாவிற்கு சிறப்பு மருத்துவம் அளித்த ரிச்சர்ட் பியல் உள்ளிட்ட மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
சென்னை அப்பல்லோ மருத்துமனைக்கு முதல்வர் ஜெயலலிதா சுயநினைவுடன் தான் வந்தார், தேர்தல் ஆவணங்களில் சுயநினைவுடன் தான் கைரேகை வைத்தார் என அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு இவர்கள் மீது நடந்து வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் கடந்த 30 வருடமாக தங்கியிருந்த சசிகலா, எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்ததோடு தற்போது அதிமுக சட்டசபைத் தலைவராக சசிகலாவை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கூடிய விரைவில் தமிழக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவினால் ஜெயலலிதா மரணமடைந்தார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் பொதுச்செயலாளர் பதவி காலியாகவே இருந்தது. பிறகு சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 4-ம் தேதி ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அன்றைய தினம் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று சசிகலா 2-வது நாளாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஜெயலலிதாக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிய மனுவை சென்னை உச்ச நீதிமன்றம் தள்ளபடி செய்தது.
கே.கே.ரமேஷ் சார்பில் சென்னை உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டதாவது:
1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பிறந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார். திரைப்படத்துறையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பல விருதுகளை பெற்றுள்ளார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு, தமிழக முதல்அமைச்சராக பதவி வகித்தார்.
திமுகவின் பொதுக்குழுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
உடல்நலக்குறைபாடு காரணமாக உயிரிழந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு திமுகவினரின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கியூபாவின் புரட்சியாளரும், பொதுவுடமை போராளியுமான ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
திமுகவின் உயர்மட்டக்குழு உறுப்பினரான மறைந்த தலைவர் கோ.சி.மணி, மூத்த பத்திரிகையாளர் சோ, நடிகர் குமரிமுத்து, திமுவை சேர்ந்த சற்குண பாண்டியன் ஆகியோருக்கும் இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது.
ஜெயலலிதா நினைனவிடத்தில் கண்ணீர் மல்க சசிகலா அஞ்சலி.
அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா நடராஜன் நாளை காலை கட்சி தலைமை அலுவலகத்தில் பதவி ஏற்று கொள்கிறார். இந்நிலையில் ஜெயலலிதா நினைனவிடத்தில் கண்ணீர் மல்க சசிகலா அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்தவர் ஜெயலலிதா. இவர் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.