பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதையும், உதவி மற்றும் உறுதியான ஆதரவை அளிப்பதையும் பாகிஸ்தான் தனது அரசாங்க கொள்கையாகவே கொண்டுள்ளது என்பதை உறுப்பு நாடுகள் அறிந்திருக்கின்றன.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான அக்னி -5 ஏவுகணையை இந்தியா சோதிக்க உள்ள நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த ஏவுகணை சோதனை குறித்து பதற்றத்தில் உள்ளன. இந்தியா ஏற்கனவே ஏழு முறை அக்னி -5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா, பாகிஸ்தான் பதறும் காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
சார்க் மாநாட்டில் தலிபான்களை பங்கேற்க செய்யும் பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா முறியடித்த பின், சர்வதேச அரங்கில் தலிபான்கள் இடம் பெற செய்ய என பாகிஸ்தான் கடுமையாக முயற்சி செய்து வருகிறது.
ஆப்கானிஸ்தானின் புதிய ராணுவத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட தாலிபான் மூத்த தலைவர் காரி பாசிஹுதீன், நாட்டில் விரைவில் "வழக்கமான மற்றும் ஒழுக்கமான" இராணுவம் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறியுள்ளார்.
ஐநா அறிவித்துள்ள பயங்கரவாதிகளின் பட்டியலில் உள்ளவர்களை அமைச்சர்களாக நியமிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆப்கான் அரசை உலக நாடுகள் அங்கீகரிப்பதும் சாத்தியம் இல்லை என்ற நிலை தான் உள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுவதற்கு தற்போது வாய்ப்பே இல்லை! அதுவும் இப்போதுள்ள சூழலில் இரு நாட்டு கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது தொடர்பான முடிவுகளை உடனே எடுக்க முடியாது.
ஆப்கான்ஸ்தானை தாலிபான் கைபற்றியதிலிருந்து, தினமும் பல விதமான அதிர்ச்சி தரும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை, ஷரியத் சட்டம் தான் என தெளிவாக தாலிபான் அறிவித்து விட்டது.
இந்திய ராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக பதவியேற்கலாம் என்று கருதப்படுகிறது. அவர் இந்தியாவைப் பற்றி தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது...
1999 ஆம் ஆண்டு மசூத் அசார் விடுவிக்கப்பட்டார். அப்போதிருந்து, ஜம்மு-காஷ்மீரில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு உருவாக்கப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடகிழக்கில் உள்ள பஞ்ச்ஷிர், தாலிபான்களுக்கு சவாலாக உள்ள ஒரு மாகாணமாகும். கானி அமைச்சரவையின் முதல் துணைத் தலைவர் அம்ருல்லா சலேஹ் மற்றும் அஹ்மத் மசூத் ஆகியோரது தலைமயில் தாலிபான்களுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கும் குழுவின் மையப்பகுதியாக இது விளங்குகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பின்னர் பல முன்னாள் அரசு அதிகாரிகள் காணாமல் போயுள்ளதாக அந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை தெரிவித்துதனர்.
கடந்த சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் பரபரப்பான பல சம்பவங்கள் நடந்து விட்டன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட ஆப்கானின் கிட்டத்தட்ட அனைத்து நகரங்களையும் தாலிபான் தன்வயப் படுத்தியது.
காந்தஹாரில் பணிபுரியும் 21 வயது பெண் ஆசிரியர் ஒருவர் தான் காபூலுக்கு தப்பி வந்ததாகக் கூறினார். காந்தஹாரில் அவர் எப்போதும் வீட்டிலேயே இருந்ததாகவும், வெளியே செல்ல முடியாத சூழல் இருந்ததாகவும் அவர் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.