சீனாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 10 தென் கொரிய குழந்தைகள் பலி

Last Updated : May 9, 2017, 03:27 PM IST
சீனாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 10 தென் கொரிய குழந்தைகள் பலி title=

சீனாவின் சுரங்கப்பாதையில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து திடீர் விபத்திற்குள்ளானது. இதில் 12 பேர் உயிரிழந்தனர்.

சீனாவில் கிழக்குப்பகுதியில் உள்ள குயிங்டோவில் நகரில் இன்று பள்ளிப்பேருந்து ஒன்று சுரங்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அப்பேருந்தில் பயணித்த 10 குழந்தைகள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாங்டங் மாகாணத்தின் வெய்ஹாய் என்னும் இடத்தில் தங்கி படித்துவந்த அந்த குழந்தைகள் தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு வயது நான்கு முதல் ஏழு வரை மட்டுமே என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது.

இந்த விபத்து குறித்து குயிங்டோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News