திருநங்கைகளை சிதைத்த காம கொடூரர்கள்!

Last Updated : Sep 5, 2017, 12:55 PM IST
திருநங்கைகளை சிதைத்த காம கொடூரர்கள்! title=

கராச்சியில் ஒரு கொடூர சம்பவத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பலளால் இரண்டு திருநங்கைகள் கொருரமாக வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர்.

கராச்சியின் பிளவால் சஹா நூரணி பகுதியில் குடியிருப்பு ஒன்றில் திருநங்கைகள் குழுவாக இணைந்து வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தனர். அங்கு அத்துமீறி நுழைந்த 5 பேர் கொண்ட நண்பர்கள் குழு தங்களை நடனமாடி சந்தோசம் படுத்த வேண்டுமென பணித்துள்ளனர்.

இதை மறுத்த திருநங்கைகளுக்கும் அவர்களுக்கும் பிரச்சனை வலுக்க தாக்குதலாக மாறியது. பின்னர் திருநங்கைகளில் இருவரை கொடூரமாக அத்துமீறி வந்த கும்பல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பதிக்கப்பட்ட சப்னா கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். எனினும் புகார் அளித்து 5 நாட்களாகியும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையாக போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளதாகவும் சப்னா தெரிவித்தார்.

Trending News