Old Pension குறித்து மிகப்பெரிய ஜாக்பாட் அப்டேட், உடனடியாக இதை படியுங்கள்

Old Pension Scheme Update: நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நிலவி வரும் நிலையில் அரசாங்கத்தினால் ஒரு முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரத்தை அறிவோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 18, 2023, 09:41 AM IST
  • பழைய ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள் என்ன.
  • அரசு புதிய ஊதியக்குழுவை அமல்படுத்தினாலும், ஓய்வூதியத்தை உயர்த்துகிறது.
  • பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது.
Old Pension குறித்து மிகப்பெரிய ஜாக்பாட் அப்டேட், உடனடியாக இதை படியுங்கள் title=

பழைய ஓய்வூதியச் செய்திகள்: நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நிலவி வரும் நிலையில் அரசாங்கத்தினால் ஒரு முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பல மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. தற்போது பழைய ஓய்வூதியம் குறித்து நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஏப்ரல் 1, 2023 முதல் நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க ஹிமாச்சல் அரசு முடிவு செய்துள்ளது, அதாவது இனி இந்த மாநில மக்கள் அனைவரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள்.

1.36 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள்
இந்த நிலையில் தற்போது ஹிமாச்சலப் பிரதேச அரசு, பழைய ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2023 முதல் மீண்டும் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநில அரசு ஊழியர்கள் 1.36 லட்சம் பேர் பயனடைவார்கள். மேலும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் விலக்கு பெற வேண்டியதில்லை.

மேலும் படிக்க | 7th Pay Commission: 3% டிஏ உயர்வுடன் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை அறிவிப்பு!

இது தொடர்பாக மாநில தலைமை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்
இதற்கிடையில் பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை மாநில தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அமைச்சரவையின் முடிவின்படி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள மாநில அரசு ஊழியர்களின் பங்களிப்பு (முதலாளி மற்றும் ஊழியர்களின் பங்கு) ஏப்ரல், 2023 முதல் நிறுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தல் வாக்குறுதிகளில் பழைய ஓய்வூதியத் திட்டம் இடம் பெற்றுள்ளது
2022 சட்டமன்றத் தேர்தலில் பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுப்பது காங்கிரஸின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும், இது தொடர்பாக ஜனவரி 13, 2023 அன்று நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள் என்ன?
இதனிடையே பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பற்றி பேசுகையில், அதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது கடைசியாக எடுக்கப்பட்ட சம்பளத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. இது தவிர, பணவீக்க விகிதம் அதிகரிக்கும்போது, ​​டிஏவும் அதிகரிக்கிறது. அரசு புதிய ஊதியக்குழுவை அமல்படுத்தினாலும், ஓய்வூதியத்தை உயர்த்துகிறது.

பழைய ஓய்வூதியத் திட்டம் ஏற்கனவே பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. இதற்குப் பிறகு, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஹிமாச்சப் பிரதேச அரசுகளும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Income Tax Return: படிவம் 16 இல்லாமல் ஐடிஆர் தாக்கல் செய்ய முடியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News