COVID Alert: கரன்சி நோட்டுகள் கொரோனாவை பரப்பும்: RBI

ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா இல்லையா என்பதை தெளிவுபடுத்தக் கோரி 2020 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமனுக்கு CAIT கடிதம் எழுதியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2020, 04:06 PM IST
  • ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் பரவக்கூடும் எனRBI கூறியுள்ளது.
  • ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கு டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை அதிகப்படுத்த வேண்டும். – RBI.
  • டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் வங்கி கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.-CAIT
COVID Alert: கரன்சி நோட்டுகள் கொரோனாவை பரப்பும்: RBI title=

புது தில்லி: அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) ஞாயிற்றுக்கிழமை, கொரோனா வைரஸ் கரன்சி நோட்டுகள் மூலம் பரவும் என ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியதாகவும், டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கு அரசாங்க ஊக்கத்தொகையை கோரியுள்ளதாகவும் கூறியது.

ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா இல்லையா என்பதை தெளிவுபடுத்தக் கோரி 2020 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமனுக்கு CAIT கடிதம் எழுதியதை அடுத்து இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த கடிதம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) அனுப்பப்பட்டது. RBI, CAIT க்கு பதிலளித்தது. ரூபாய் நோட்டுகள் (Currency Notes) மூலம் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் பரவக்கூடும் என்றும், இதனால், ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கு டிஜிட்டல் கொடுப்பனவுகளை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியது. இந்த செய்தியை CAIT ஒரு அறிக்கையில் கூறியது.

ரிசர்வ் வங்கி மேலும் கூறுகையில், "கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக, மொபைல் மற்றும் இன்டர்நெட் வங்கி முறைகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் போன்ற பல்வேறு ஆன்லைன் டிஜிட்டல் சேனல்கள் மூலம் பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே பணம் செலுத்தலாம். முடிந்தவரை பணத்தை பயன்படுத்துவதை அல்லது திரும்பப் பெறுவதைத் தவிர்க்கலாம்" என்று தெரிவித்துள்ளது.

CAIT தேசியத் தலைவர் பி.சி.பார்டியா மற்றும் பொதுச்செயலாளர் பிரவீன் காண்டேல்வால் ஆகியோரின் கூற்றுப்படி, ரிசர்வ் வங்கியின் பதில் ரூபாய் நோட்டுகள் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளன என்பதைக் குறிக்கிறது. எனவே, ரூபாய் நோட்டுகளைக் கையாளுவதைத் தவிர்ப்பதற்கு டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களை (Digital Transactions) அதிகபட்சமாகப் பயன்படுத்துவது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ: Home loan அடைந்து விட்டதா? இந்த முக்கிய வேலையை செய்ய மறக்காதீர்கள்!!

மேலும், டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு 'ஊக்கத்தொகை' திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு CAIT நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக்கொண்டது.

"டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு (Digital Transactions) விதிக்கப்படும் வங்கி கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். மேலும் வங்கி கட்டணங்களுக்கு பதிலாக அரசாங்கம் நேரடியாக வங்கிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"சில காலம் கழித்து, அத்தகைய மானியம் அரசாங்கத்திற்கு நிதிச் சுமையாக இருக்காது; மறுபுறம், இது வங்கி நோட்டுகளை அச்சிடுவதற்கு ஏற்படும் செலவுகளைக் குறைக்கும்."

கூடுதலாக "2018-19-ல் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு மற்றும் அளவு முறையே 17 சதவீதம் மற்றும் 6.2 சதவீதம் அதிகரித்து 21,109 பில்லியன் ரூபாய் மற்றும் 108,759 மில்லியன் ரூபாய் நோட்டுகளாக இருந்தன” என்று ஆகஸ்ட் 29, 2019 அன்று வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையில் RBI தெரிவித்துள்ளது என்று CAIT சுட்டிக்காட்டியது.

ALSO READ: ஒரு நாளைக்கு 30 ரூபாய் சேமித்து கோடீஸ்வரராகும் Formula இதுதான்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News