ஒற்றை தலைவலியை ஓட விரட்ட... மாத்திரைகள் வேண்டாம்... சில எளிய தீர்வுகள் இதோ!

Natural Remedies For Migraine: மைக்ரேன் வலி என்பது யாரோ ஒருவர் மண்டையில் சுத்தியலால் அடிப்பது போல் இருக்கும். சாதாரண சத்தம் கூட கேட்க முடியாது. தலைவலியுடன் சேர்த்து குமட்டல் போன்ற உணர்வு, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால், அதனை மைக்ரேன் தலைவலி என கூறுவர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 11, 2024, 05:41 PM IST
  • தலைவலிக்கும் குடல் ஆரோக்கியத்திற்க்கும் இடையே நெருங்கி தொடர்பு உண்டு.
  • பலர் உடனடி நிவாரணம் பெற வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்கிறார்கள்.
  • வலி நிவாரணிகளை உட்கொள்வதன் மூலம் மனச்சோர்வு மற்றும் பதட்டத்திற்கு ஆளாகலாம்.
ஒற்றை தலைவலியை ஓட விரட்ட... மாத்திரைகள் வேண்டாம்... சில எளிய தீர்வுகள் இதோ! title=

Natural Remedies For Migraine: மைக்ரேன் வலி என்பது மிகவும் கடுமையான தலைவலி. யாரோ ஒருவர் மண்டையில் சுத்தியலால் அடிப்பது போல் இருக்கும். சாதாரண சத்தம் கூட கேட்க முடியாது. தலைவலியுடன் சேர்த்து குமட்டல் போன்ற உணர்வு, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால், அதனை மைக்ரேன் தலைவலி என கூறுவர்.  தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒற்றைத் தலைவலி உங்கள் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் ஆற்றல் கொண்டது. 

உலகில் உள்ள சுமார் 100 கோடி மக்கள் இந்த வேதனையை அனுபவித்து வருகின்றனர் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. சைனஸ், சளி - இருமல், உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், கண் வறட்சி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை காரணமாக ஒற்றை தலைவலி ஏற்படலாம். காரணம் தெரியாமல் பலர் உடனடி நிவாரணம் பெற வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்கிறார்கள். இங்குதான் மக்கள் பெரும் தவறு செய்கிறார்கள்.

தலைவலி தீர வலி நிவாரணிகளை உட்கொள்வதன் மூலம் தற்காலிக நிவாரணம் பெறலாம். ஆனால், இதன் பக்கவிளைவாக, மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே ஒற்றைத் தலைவலி வலியின் போது, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தவறுதலாக கூட வலி நிவாரணிகளை எடுக்கக்கூடாது. ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள் என்ன, அதிலிருந்து விடுபட நீங்கள் என்ன செய்ய வேண்டும்  (Health Tips) என்று அறிந்து கொள்வோம்.

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள்

1. தலையில் தாங்க முடியாத வலி
2. சத்தம் கேட்க முடியாத நிலை
3. ஒளியை பார்க்க முடியாத நிலை
4. வாந்தி, குமட்டல்
5. மயக்கம்
6. சோர்வு
7. கண் எரிச்சல்

தலைவலியைத் தவிர்ப்பதற்கான வழிகள்

வாயு பிரச்சனை ஏற்பட அனுமதிக்காதீர்கள்:

தலைவலிக்கும் குடல் ஆரோக்கியத்திற்க்கும் இடையே நெருங்கி தொடர்பு உண்டு. ஒற்றைத் தலைவலி தாக்குதல்கள் பெரும்பாலும் குமட்டல் மற்றும் வாந்தியுடன் இருக்கும். மேலும் அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், இரைப்பை குடல் கோளாறுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. எனவே, குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொண்டால் ஒற்றை தலைவலியில் இருந்து தப்பிக்கலாம்.

மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை சுலபமா குறைக்க உதவும் இலவங்கப்பட்டை டீ: தினமும் இப்படி குடிங்க

அனுலோம்-விலோம் பிராணாயாமம்:

ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலியைப் போக்க அனுலோம்-விலோம் பிராணாயாமம் மிகவும் பயனுள்ள யோகாசனம். இதனால் தலைவலி மட்டுமின்றி மன அழுத்தமும் நீங்கும். இந்த ஆசனத்தை தினமும் சுமார் 15 நிமிடங்கள் செய்து வந்தால், பல நன்மைகளைப் பெறலாம்.

தலைவலியை தவிர்க்க உணவில் சேர்க்க வேண்டியவவை:

முளை கட்டிய தானிய உணவுகள்: 

ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபட, முளை கட்டிய தானிய உணவுகளை அதிகம் சாப்பிடத் தொடங்குங்கள். முளை கட்டுவதால், ஊட்டசத்து மதிப்பு இரட்டிப்பாகிறது. எனினும், முளை கட்டிய தானிய உணவுகளை பச்சையாக சாப்பிடுவதை விட, சிறிது வேக வைத்து சப்பிடுவது நல்லது.

பச்சை காய்கறிகள்: 

பச்சை காய்கறிகள் ஒற்றைத் தலைவலியின் தீவிரத்தை குறைக்க உதவும். பச்சை காய்கறிகளில் கீரை, வெந்தயக் கீரை, பீன்ஸ், சுரைக்காய் போன்ற காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது பலன் அளிக்கும்.

மெக்னீஷியம் சத்து நிறைந்த உணவுகள்

நரம்புகளை தளர்த்துதல் மற்றும் இரத்த நாளங்களின் ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு மெக்னீசியம் சத்து முக்கியமானது. ஒற்றைத் தலைவலி ஏற்பட மெக்னீஷியம் குறைபாடும் ஒரு காரணம். இந்நிலையில், கீரை, பாதாம் மற்றும் சூரியகாந்தி விதைகள் போன்ற நட்ஸ் மற்றும் விதைகள், பருப்பு வகைகள், முழு தானியங்கள் மற்றும் சால்மன் போன்ற ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த மீன்கள்  போன்ற உணவுகளில் மெக்னீசியம் ஏராளமாக உள்ளன. 

மூலிகை டீ: 

இஞ்சி மற்றும் எலுமிச்சை கலந்த பிளாக் டீ,  தலைவலியை எதிர்த்துப் போராடுவதற்கும், மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கவும் மிகவும் சிறந்ததாக அறியப்படுகிறது. கெமோமில் டீ ஒற்றைத் தலைவலி அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கக்கூடிய சிறந்த சிகிச்சைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

தேங்காய் மற்றும் கிராம்பு எண்ணெய் 

10 கிராம் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 கிராம் கிராம்பு எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் - கிராம்பு எண்ணெய் இரண்டையும் கலக்கவும். இதனை தலையில் தடவினால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | அடாவடி யூரிக் அமிலத்தை அட்டகாசமாய் குறைக்க இந்த பானங்கள் குடிங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News