CBSE - 10 மற்றும் 12 தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்த நிர்வாகம் முடிவு...

கொரோனா வைரஸ் முழு அடைப்பால் இடைநிறுத்தி வைக்கப்பட்ட மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 10 மற்றும் 12 தேர்வுகளை ஜூலை முதல் இரண்டு வாரங்களில் நடத்த வாய்ப்புள்ளது. 

Last Updated : May 8, 2020, 05:40 PM IST
CBSE - 10 மற்றும் 12 தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்த நிர்வாகம் முடிவு... title=

கொரோனா வைரஸ் முழு அடைப்பால் இடைநிறுத்தி வைக்கப்பட்ட மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 10 மற்றும் 12 தேர்வுகளை ஜூலை முதல் இரண்டு வாரங்களில் நடத்த வாய்ப்புள்ளது. 

திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை இந்த வாரம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

JEE மெயின் தேர்வு நடத்தப்படுவதற்கு முன்பு 12-ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் முடிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. NIT-களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஜூலை 18 முதல் 23 வரை ஐந்து நாட்களில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக CBSE தனது மீதமுள்ள தேர்வுகளை இந்த காலத்திற்குள் நடத்தி முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் முழு அடைப்பால் நாட்டில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால் குறித்த தேர்வுகள் தாமதமாகியுள்ளன. COVID-19 வெடிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக நாடு முழுவதும் வகுப்பறைகள் நிறுத்தப்படுவதாக மையம் அறிவித்த மார்ச் 16 முதல் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களும் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது இடை நிறுத்திவைத்த தேர்வுகளை மீண்டும் நடத்துவது தொடர்பாக அரசு திட்டமிட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பூட்டப்பட்டதை அடுத்து மற்ற போட்டித் தேர்வுகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News