நாயை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் - சிக்கிய வீடியோ... பதறிய மக்கள்!

மும்பை பவாய் பகுதியில் உள்ள பிரபல மாலின் பின்பகுதியில் பட்ட பகலில் நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 1, 2022, 08:36 PM IST
  • இளைஞர் அந்த நாயிடம் பலமுறை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.
  • இதை அந்த வழியாக வந்த உணவு டெலிவரி பணியாளர் வீடியோ எடுத்துள்ளார்.
  • அந்த வீடியோ விலங்கு நல ஆர்வலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாயை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் - சிக்கிய வீடியோ... பதறிய மக்கள்! title=

இந்தியாவில் விலங்குகளுக்கு எதிரான வன்முறை அதிகமாக காணப்படும் நிலையில், அதில் அதிகமாக பாதிக்கப்படுவது என்றால் ஆதரவற்று பொதுவெளியில் அலையும் தெருநாய்கள்தான். அந்த வகையில், மும்பையில் தெரு நாய்க்கு நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையில் விலங்கு நல ஆர்வலர் கடந்த சனிக்கிழமை அன்று (அக். 29) கொடுத்த புகாரை தொடர்ந்து, 28 வயதான இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விலங்கு நல ஆர்வலரான மினு சேத், ஒரு வீடியோ ஆதாரம் ஒன்றையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த வீடியோவில், கைது செய்யப்பட்ட இளைஞர் தெருநாயை பாலியல் வன்புணர்வு செய்தது பதிவாகியிருந்தது. இதனால்தான், போலீசார் அந்த இளைஞரை கைதுசெய்தனர். 

மேலும் படிக்க | திகிலூட்டும் வைரல் வீடியோ: மனித தலையை கவ்வியபடி ஓடும் நாய்

பிறந்து ஆறு மாதமே ஆன அந்த தெருநாய், மும்பையின் பவாய் நகரில் உள்ள பிரபல மால் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளது. அங்குள்ள பார் மற்றும் உணவக பணியாளர்கள் அந்த நாயை பராமரித்து வந்துள்ளனர். அந்த மால் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அந்த விலங்கு நல ஆர்வலரான மினு சேத்திடம் அந்த கொடூர சம்பவம் அடங்கிய வீடியோவை கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து, மினு சேத் புகார் அளித்துள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞர் உணவு டெலிவரி செய்யும் பணியாளர் என்றும் கூறப்படுகிறது. 

அந்த நாயிடம் கைது செய்யப்பட்ட இளைஞர் பல நாள்களாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்துள்ளார். இதை உணவு டெலிவரி செய்யும் சக பணியாளர் ஒருவர் நேரில் பார்த்ததை அடுத்து, அவரது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். போலீசார் அந்த இளைஞரை ஐபிசி 377 (இயற்கைக்கு மாறான குற்றம்) மற்றும் மிருகவதை தடுப்பு சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தது. 

மும்பை பவாயில் இதேபோன்று, கடந்தாண்டு ஒரு நாயை வேறொரு இளைஞர் பாலியல் வன்புணர்வு செய்தது மட்டுமின்றி, அதன் பிறப்புறுப்பில் குச்சியை திணித்து சித்ரவதை செய்த சம்பவமும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | முதலை வடிவில் ராட்சத உடும்பு, அலறியடித்து ஓடிய மான்: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News