மாணவன் கையில் கல்விக் கட்டணத்தை முத்திரை குத்தி அனுப்பிய பள்ளி!

பஞ்சாப் மாநிலத்தில் கல்விக் கட்டணம் கட்டாத மாணவனின் கையில் கல்வி கட்டண முத்திரை குத்தி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Last Updated : May 29, 2019, 05:51 PM IST
மாணவன் கையில் கல்விக் கட்டணத்தை முத்திரை குத்தி அனுப்பிய பள்ளி! title=

பஞ்சாப் மாநிலத்தில் கல்விக் கட்டணம் கட்டாத மாணவனின் கையில் கல்வி கட்டண முத்திரை குத்தி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள எஸ்டிஎன் எனும் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஹர்ஸ்தீப் சிங் கல்விக் கட்டணம் செலுத்தப்படாததால், பள்ளி நிர்வாகம் தொடர்ந்து பெற்றோருக்கு நினைவுபடுத்தி உள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஹர்ஸ்தீப் சிங், தேர்வு எழுத சென்றபோதும் கல்விக் கட்டணத்தை கட்டும்படி கூறியுள்ளார். அத்துடன், பெற்றோருக்கு மீண்டும் நினைவுபடுத்தும் வகையில், மாணவனின் கையில் கல்வி கட்டண முத்திரை குத்தி உள்ளார். தற்போது இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Trending News