ராகு கேது பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பம்பர் அதிர்ஷ்டம்: பண மழை பொழியும்

Rahu Ketu Peyarchi: ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு ஏற்படப்போகும் முக்கிய மாற்றங்களைப் பற்றி பார்க்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 8, 2022, 05:40 PM IST
  • துலா ராசிக்காரர்களின் வருமானம் கூடும்.
  • கும்ப ராசிக்காரர்களுக்கும் இந்தப் பெயர்ச்சி சாதகமாக இருக்கும்.
  • இந்த நேரத்தில் நிதி சிக்கல்களில் இருந்து விடுபட நல்ல வாய்ப்பு உள்ளது.
ராகு கேது பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பம்பர் அதிர்ஷ்டம்: பண மழை பொழியும் title=

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. இந்த கிரகங்களில் சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் மீது பொதுவாக மக்களுக்கு அதிக அச்சம் இருக்கின்றது. இந்த கிரகங்களில் கோவத்திலிருந்து தப்பிக்கவே அனைவரும் விரும்புகிறார்கள். 

ராகு-கேது கிரகங்கள் பாவ கிரகங்களாக கருதப்படுகின்றன. தற்போது ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சரித்து வருகின்றனர். ஜோதிட சாஸ்திரப்படி இரு கிரகங்களும் தங்கள் ராசியை மாற்ற குறைந்தது 18 மாதங்கள் ஆகும். இந்த கிரகங்களின் சிறப்பு என்னவென்றால், இந்த இரண்டு கிரகங்களும் எப்போதும் வக்கிர இயக்கத்தில் அதாவது தலைகீழ் இயக்கத்தில் நகர்கின்றன. 

இதனால் இந்த கிரகங்களின் மாற்றம் அடுத்த கிரகத்தில் இல்லாமல் முந்தைய இடத்தில் நடக்கிறது. ஜோதிட சாஸ்திரப்படி ஏப்ரல் 12ம் தேதி ராகுவும் கேதுவும் தங்கள் ராசியை மாற்றுவார்கள். இந்த ராசி மாற்றத்தில் ராகு, மேஷ ராசியிலும் கேது துலா ராசியிலும் மாறப்போகிறார்கள். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு ஏற்படப்போகும் முக்கிய மாற்றங்களைப் பற்றி பார்க்கலாம். 

ரிஷபம்: 

ஜோதிட சாஸ்திரப்படி ராகு, கேதுவின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த சஞ்சாரத்தால் இவர்களுக்கு சிறப்புப் பலன்கள் கிடைக்கும். ரிஷப ராசிக்காரரகளுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் நிதி சிக்கல்களில் இருந்து விடுபட நல்ல வாய்ப்பு உள்ளது. ராகு கேது பெயர்ச்சியின் போது தொழிலில் சிறப்பு கவனம் செலுத்துவீர்கள். மொத்தத்தில் இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி 2022: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி தலைகீழாக மாறும், செல்வம் பெருகும் 

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மங்களகரமானதாக இருக்கப் போகிறது. மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். தடைபட்ட வேலைகள் முடியும். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் இந்தக் காலத்தில் பலன் அடைவார்கள். வணிக பயணத்தினால் லாபம் உண்டாகும். 

துலாம்: 
துலா ராசிக்கு ஜாதகத்தில் ராகு-கேது சுப ஸ்தானத்தில் இருப்பது அவர்களுக்கு அளப்பரிய பலன்களைத் தரும் என்கின்றனர் ஜோதிடர்கள். துலா ராசிக்காரர்களின் வருமானம் கூடும். தொழிலில் முன்னேற்றம் அடைய அதிகப்படியான வாய்ப்புகள் கூடி வரும். தொழிலிலும் லாபம் கூடும்.

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். பணம் சம்பாதிக்க பல புதிய வழிகள் திறக்கும். உங்களின் கடின உழைப்பு வீண் போகாது. இந்த காலகட்டத்தில் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்கவில்லை.) 

மேலும் படிக்க | சூரியனின் சஞ்சாரம் இந்த ‘5’ ராசிகளுக்கு அளவிட முடியாத செல்வத்தைத் தரும்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News