உலக புகழ்பெற்ற தாஜ்மஹாலில் தாய்பால் ஊட்ட தனியறை....

தாய்ப்பால் தனியறைக் கொண்ட இந்தியாவின் முதல் நினைவுச் சின்னம் என்ற பெருமையை தாஜ்மஹால் பெற உள்ளது!

Last Updated : May 28, 2019, 12:07 PM IST
உலக புகழ்பெற்ற தாஜ்மஹாலில் தாய்பால் ஊட்ட தனியறை.... title=

தாய்ப்பால் தனியறைக் கொண்ட இந்தியாவின் முதல் நினைவுச் சின்னம் என்ற பெருமையை தாஜ்மஹால் பெற உள்ளது!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு காதலின் சின்னமாக பார்க்கப்படுகிறது. முகாலய மன்னன் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ்க்கு காதல் பரிசாக இதை கட்டினார். 

இதுதொடர்பாக பல்வேறு கருத்துகள் இருந்தாலும் முகாலய கட்டகலையின் சிறந்த படைப்பாக இது பார்க்கப்படுகிறது. தாஜ்மகாலை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர்.

தலைநகர் புதுடெல்லி அருகேயுள்ள ஆக்ரா நகரில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தாஜ் மஹால் இந்தியாவின் அடையாளங்களுள் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு நாளுக்கு நாள் அதிகரித்து  தான் வருகிறது. 

இந்நிலையில், லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக விளங்கும் தாஜ்மஹாலில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்ட பெண்கள் மிகவும் சிரமப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய தொல்பொருளியல் ஆய்வுத்துறை அறிவுறுத்தலின்படி தாய்ப்பால் புகட்டுவதற்கான பிரத்யேக அறை கட்டும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. 

கட்டிடம் கட்டும் பணிகள் முடிந்து, ஜூலை மாதத்திலிருந்து இந்த அறையானது பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாய்ப்பால் தனியறைக் கொண்ட இந்தியாவின் நினைவுச் சின்னம் என்ற பெருமையை தாஜ்மஹால் பெற இருக்கிறது.

Trending News