பிக் பாஸ் வீடு ஒரு....தகாத வார்த்தையில் பேசிய அபிஷேக் ராஜா

மாமியார் வீட்டுக்கு சாரி பிக் பாஸ் வீட்டுக்கு இரண்டாவது முறையாக சென்று வந்த பிறகு இப்போது தான் பேசுகிறேன் என்று அபிஷேக் ராஜா பேச ஆரம்பிக்கிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 11, 2021, 10:05 AM IST
பிக் பாஸ் வீடு ஒரு....தகாத வார்த்தையில் பேசிய அபிஷேக் ராஜா title=

உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 (Bigboss5) நிகழ்ச்சி 68 நாட்களை எட்டியுள்ளது. ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், பிரியங்கா, இமான் அண்ணாச்சி, ராஜூ, தாமரை, அக்ஷரா, வருண், சிபி, பாவனி, நிரூப், சஞ்சீவ், அமீர் மற்றும் அபிநய் உள்ளிட்ட போட்டியாளர்கள் இருக்கின்றனர். 

இதில் அபிஷேக் ராஜா (Abhishek Raja) போட்டியாளராக கலந்துகொண்ட போது ஆரம்பத்தில் அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் வீட்டில் மற்ற போட்டியாளர்களை influence செய்து விளையாட விடாமல் செய்து வந்ததால் மக்களை அவரை எலிமினேட் செய்து விட்டனர். அதனை தொடர்ந்து மீண்டும் ஒருமுறை வீட்டுக்குள் (Bigg Boss Tamil) சென்ற நிலையில் மறுபடியும் அவரை மக்கள் வெளியேற்றினார்கள். கடந்த வாரம் வெளியில் வந்த அபிஷேக் ராஜா இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசினார். இந்த வீடியோவில் அவர் நண்பர்கள் உடன் வெளியில் செல்லும் போது தான் பேசினார். அதில், 

Also Read | கொரோனா விதிகளை மீறி பிக்பாஸ் : கமலுக்கு நோட்டீஸ்

மாமியார் வீட்டுக்கு சாரி பிக் பாஸ் வீட்டுக்கு இரண்டாவது முறையாக சென்று வந்த பிறகு இப்போது தான் பேசுகிறேன் என்று அபிஷேக் ராஜா பேச ஆரம்பிக்கிறார். அத்துடன் ஒருகட்டத்தில் தகாத வார்த்தையில் நண்பரை திட்டுகிறார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததை விட வெளியில் அபிஷேக் ராஜா மிகவும் மோசமாக பேசுவார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

இதற்கிடையில் இந்தவாரம் டபுள் எமிலினேஷன் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியானவுடன், யார் வெளியேற்றப்படுவார்கள்? என்பது டிவிட்டர் உள்ளிட்ட ஷோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. பிக்பாஸ் பைனலிஸ்ட் என்றெல்லாம் இதுவரை சொல்லிக் கொண்டிருந்தவர்களின் பெயர்கள், இந்தவார எலிமினேஷனில் அடிபடுகிறது. காரணம், இந்த வாரம் முழுவதும் நடைபெற்ற அரசியல் கட்சி டாஸ்க்கில் அவர்களது ஈடுபாடு பெரிய அளவில் இல்லை. மேலும், சில வாக்குவாதங்களில் இதுநாள் வரை கட்டிக்காத்து வந்த பெயர்களை டோட்டல் டேமேஜ் செய்து கொண்டுள்ளனர். குறிப்பாக, ராஜூ பிரியங்காவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அபிநய் மற்றும் பாவனி குறித்து பேசியது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read | கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்க மாட்டோம்: தமிழக சுகாதாரத் துறை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News