TV Serial Maari: காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! மாரி சீரியல் எபிசோட் அப்டேட்

Mari Zee Tamil mega serial update: கடத்தப்படும் துர்கா.. மாரிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 23, 2023, 01:21 PM IST
  • கடத்தப்படும் துர்கா.. மாரிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
  • பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல்
  • இன்றைய எபிசோட் அப்டேட்
TV Serial Maari: காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! மாரி சீரியல் எபிசோட் அப்டேட் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான மாரி சீரியல், தெய்வத்தின் அருள் பெற்ற ஒரு பெண் மற்றும் அவரைச் சுற்றி நடக்கும் கதையாக புனையப்பட்டது. பல எதிர்பார்க்காத திருப்பங்களுடன் வெற்றி நடைபோடும் மாரி சீரியல், தொலைகாட்சி ரசிகர்களின் மனங்களில் இடத்தை பிடித்துள்ளது.

பரபரப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வரும் இந்த தொடரின் லேட்டஸ்ட் எபிசோடில் என்ன நடக்கும்?

இன்றைய எபிசோட்

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் துர்கா சக்கரையின் ஆட்களிடம் இருந்து தப்பித்து முத்துப்பேச்சி வீட்டுக்கு ஓடி வரும்போது ராசாத்தியின் போட்டோவை வைத்து முத்துபேச்சி பேசிக் கொண்டிருக்க துர்காவுக்கு முத்துப்பேச்சி உண்மையாகவே தன்னுடைய பெரியம்மா தான் என்ற ரகசியம் தெரிய வருகிறது.

அதோடு முத்துப்பேச்சி துர்காவை பார்ப்பதற்குள் அங்கு வரும் ரௌடிகள் அவளை கடத்திக் கொண்டு போய் ஒரு ரூமில் கட்டி வைத்து விடுகின்றனர். மறுபக்கம் மாரி மற்றும் சூர்யா இருவரும் வீட்டுக்கு வர ஹாசினி துர்கா எங்கே? அவ உங்கள பாக்க தான் முத்துப்பேச்சி வீட்டுக்கு தனியா கிளம்பி வந்தா என்ற விஷயத்தை சொல்ல துர்கா காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைகின்றனர்.

மேலும் படிக்க | மாரி சீரியல் அப்டேட்: பூட்டியிருந்த கோயிலை திறந்த மாரி-பஞ்சாயத்தை கூட்டிய சர்க்கரை!

பிறகு சூர்யா துர்காவை தேடி போக அப்போது அவனுக்கு அவளது கால் செயின் மட்டும் கிடைக்கிறது. இன்னொரு புறம் மாரி முத்துப்பேச்சியின் வீட்டுக்கு பின்புறமாக சென்று துர்கா குறித்து விசாரிப்பது மட்டுமல்லாமல் நீங்க இந்த கோவில் திருவிழாவில் சாமியாட வேண்டுமா எனக்கு ஏதோ பயமாக இருக்கிறது என சொல்ல முத்து பேச்சி எனக்கு எதுவும் ஆகாது. நீ துர்காவை போய் தேடு என சொல்லி அனுப்பி வைக்கிறார். 
 
அதன் பிறகு சூர்யா போலீஸ் ஸ்டேஷன் சென்று துர்காவை காணவில்லை என கம்ப்ளைன்ட் கொடுக்க இன்ஸ்பெக்டர் எல்லா போலீசும் கோவில் திருவிழா பாதுகாப்பிற்காக சென்று விட்டார்கள் இரண்டு நாள் மட்டும் டைம் கொடுங்க கண்டிப்பாக கண்டுபிடித்து தருகிறோம் என சொல்கின்றனர். 

அந்த சமயம் அங்கு சண்முகம் ராசாத்தியின் போட்டோவை கொடுத்து எல்லா இடத்தையும் தேட சொல்வதற்காக வர அப்போது சூர்யா துர்கா காணாமல் போன விஷயத்தை சொல்கிறான். 

மேலும் சண்முகத்திடம் நீங்க என்ன இங்க வந்திருக்கீங்க என கேட்க அவர் ராசாத்தியின் போட்டோவை காட்டி இவங்கதான் முத்து பேச்சியம்மாவோட தங்கச்சி, இவங்கள தேட சொல்லித்தான் இங்கே வந்திருக்கேன் என சொல்ல சூர்யாவுக்கும் உண்மைகள் தெரிய வருகிறது. 

அதன் பிறகு சூர்யா வீட்டுக்கு வந்து மாரியிடம் இந்த விஷயத்தை சொல்ல மாரி துர்காவுக்குனு ஒரு உறவு இருக்கு என மகிழ்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

காணத்தவறாதீர்கள்..

அடுத்ததாக நடக்க போவது என்பதை நேரடியாக பார்த்து தெரிந்துக் கொள்ள, மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று இரவு 8 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | கொல்லப்படும் சாமியாடி! மாரி மீது பழி! முத்துப்பேச்சியின் பதிலடி - மாரி சீரியல் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News