மாரிக்கு எதிராக சக்கரையுடன் கூட்டு சேரும் ஜாஸ்மின்! மாரி சீரியல் லேட்டஸ்ட் எபிசோட்

Mari Zee Tamil mega serial update: மாரிக்கு எதிராக சக்கரையுடன் கூட்டு சேரும் ஜாஸ்மின், நடக்க போவது என்ன? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 18, 2023, 11:37 AM IST
  • கோவிலுக்கு சென்று கடவுளை வேண்டும் முத்துப்பேச்சி
  • மாரியை கொல்ல திட்டமிடும் சர்க்கரை
  • சர்க்கரையுடன் மாரியை கொல்ல கூட்டு சேரும் ஜாஸ்மின்
மாரிக்கு எதிராக சக்கரையுடன் கூட்டு சேரும் ஜாஸ்மின்! மாரி சீரியல் லேட்டஸ்ட் எபிசோட் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. தெய்வத்தின் அருள் பெற்ற ஒரு பெண் மற்றும் அவரைச் சுற்றி நடக்கும் கதையாக புனையப்பட்டுள்ள சீரியல் மாரி. பல எதிர்பார்க்காத திருப்பங்களுடன் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மாரி சீரியல் பல சீரியல் ரசிகர்களின் மனங்களில் இடத்தை பிடித்துள்ளது. பரபரப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வரும் இந்த தொடரின் லேட்டஸ்ட் எபிசோடில் என்ன நடக்கும்?

இதற்கு முந்தைய எபிசோடில் என்ன நடந்தது?

முந்தைய எபிசோட்:

மாரி சீரியலின் நேற்றைய எபிசோடில் சக்கரை பஞ்சாயத்தை கூட்ட சாமி வந்து கோவிலை நான் தான் திறக்க வைத்தேன் என்று சொன்னதை வைத்து கலெக்டர் கோவில் திறந்தே இருக்க உத்தரவு போட்டார். 

இதனையடுத்து இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. முத்துப்பேச்சி கோவிலுக்கு சென்று கடவுளை வேண்டி விட்டு கிளம்பினார். மறுப்பக்கம் சக்கரை நடந்த விசயங்களை நினைத்து மாரியை கொல்லாமல் விட கூடாது என யோசித்து கொண்டிருக்க அங்கு வரும் சங்கரபாண்டியும் ஜாஸ்மினும் எதிரிக்கு எதிரி நண்பன், மாரியை அழிக்க நாங்க ஒரு ஐடியா தரோம் என கோயில் சாமியாடியை கொன்னுடு, கோவிலை திறந்ததால் அம்மன் சாமியாடியை கொன்று விட்டதாக பேச்சு வரும், மாரியை எல்லாரும் தப்பா பேசுவாங்க என சொல்ல சக்கரையும் இந்த திட்டத்துக்கு ஓகே சொல்கிறான். 

பிறகு மாரி முத்துப்பேச்சி வீட்டில் கூடியிருந்த மக்களிடம் எனக்கு அந்த கோவில் ரொம்ப நாளா மூடியிருக்குனு தெரியாது, எங்களை மன்னிச்சிடுங்க என சொல்ல எல்லாரும் நீங்க நல்ல விசியம் தான் பண்ணி இருக்கீங்க என சொல்கின்றனர். மேலும் கோவில் திருவிழா நடக்க போகுது, நீங்க கண்டிப்பாக இங்க இருக்க வேண்டும் என சொல்கின்றனர். 

மேலும் படிக்க | Veerapandiya Kattabomman: “வரி வட்டி கிஸ்தி..” 64 ஆண்டுகளை கடந்தும் அழியாத காவியமாய் வீரபாண்டிய கட்டபொம்மன்!

நீலகண்டன் வீட்டில் மாரியை எதிர்பார்த்து எல்லாரும் காத்திருக்க மாரி போன் செய்து இந்த ஊரில் திருவிழா நடக்க போகுது என நடந்த விசயங்கள் அனைத்தையும் சொல்லி நாளைக்கு நீங்களும் இங்க வந்துடுங்க என சொல்லி போனை வைக்கிறாள். 

அதனைத்தொடர்ந்து மாரி முத்துப்பேச்சி வீட்டை சுத்தி பார்த்து இவ்வளவு பெரிய வீட்ல அவங்க தனியாவா இருக்காங்க என யோசிக்க அங்கு வரும் ஷண்முகம் ராசாத்தி பற்றிய விசயங்களை சொல்ல மாரி ஒருவேளை அது ஏன் துர்கா அம்மாவாக இருக்க கூடாது என யோசிக்கிறாள்.  மேலும் முத்துபேச்சியின் தோழி ஒருவர் ராசாத்தியின் பழைய போட்டோ ஒன்றை கொடுக்க முத்துப்பேச்சி அதை பார்த்து பீல் செய்கிறார். 

மறுநாள் காலையில் நீலகண்டன், ஹாசினி, துர்கா ஆகியோர் முத்துப்பேச்சி ஊருக்கு வந்து பூக்கார பெண் ஒருவரிடம் மாரியை பற்றி விசாரிக்க யாரென தெரியவில்லை என பதில் சொல்கின்றனர். அதன் பிறகு முத்து பேச்சி பற்றி கேட்க அவங்க பேரை சொல்லுங்க வீட்டுக்கே கொண்டு போய் விடுவாங்க, அவ்வளவு மரியாதையா நடத்துவாங்க என சொல்கிறார். 

மேலும் படிக்க | மாரி சீரியல் அப்டேட்: பூட்டியிருந்த கோயிலை திறந்த மாரி-பஞ்சாயத்தை கூட்டிய சர்க்கரை!

பிறகு கொஞ்ச நேரம் கழித்து முத்துப்பேச்சி ஜீப் வர துர்கா அதனை தடுத்து திருத்தி முத்துப்பேச்சி யாருனு உங்களுக்கு தெரியுமா? அவங்க என்னுடைய பெரியம்மா என அளந்து விட முத்துப்பேச்சி எதுவும் தெரியாதது போல அவர்களை ஜீப்பில் ஏற்றி கொண்டு கிளம்புகிறார். அப்போது யார் அந்த முத்து பேச்சி அவங்களை பத்தி சொல்லுங்க என்று கேட்க துர்கா கோவில் திருவிழாவில் மக்கள் சாமியை கூட பார்க்காமல் எங்க பெரியம்மா முத்து பேச்சியை தான் வச்ச கண்ணு வாங்காமல் பார்ப்பாங்க என பெருமையாக பேசுகிறாள். 

இதையெல்லாம் கேட்ட முத்துப்பேச்சி ராசாதிக்கும் இப்போ இந்த வயசுல ஒரு பொண்ணு இருக்கும் என பீல் செய்து போட்டோவை பார்க்க போட்டோ தவறி கீழே விழுகிறது, துர்கா அந்த போட்டோவை எடுக்கிறாள். 

காணத்தவறாதீர்கள்..

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Jigarthanda Doube X: ஜிகிர்தண்டா 2 ரிலீஸ் தேதியை அறிவித்த கார்த்திக் சுப்பராஜ்..படு குஷியில் ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News