மாரி அப்டேட்: பேச்சியம்மன் கோவிலை திறந்து பூஜை செய்த மாரி...ஆபத்து காத்திருக்கிறதா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  

Written by - Yuvashree | Last Updated : May 15, 2023, 12:01 PM IST
  • மூடிக்கிடக்கும் கோவிலை திறக்கிறாள் மாரி.
  • முத்துப்பேச்சியின் வீட்டிற்கு விருந்திற்கு செல்கிறாள்.
  • பூஜை செய்த பூவை நீட்டுகிறாள் மாரி
மாரி அப்டேட்: பேச்சியம்மன் கோவிலை திறந்து பூஜை செய்த மாரி...ஆபத்து காத்திருக்கிறதா? title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல சீரியல்களுள் ஒன்று, மாரி. தெய்வ சக்தி நிரம்பிய ஒரு பெண்ணை சுற்றி நடக்கும் கதைதான் இது. பல எதிர்பார்க்காத திருப்பங்களோடும் கொஞ்சம் காதல் காட்சிகளோடும் மாரி சீரியல் பல குடும்பத்தாரின் மனங்களில் இடத்தை பிடித்துள்ளது. பரபரப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வரும் இந்த தொடர் குறித்த இன்றைய எபிசோட் அப்டேட்டில் தெரிந்து கொள்வோம் வாங்க. 

முந்தைய எபிசோட்:

மாரி சாமி சிலையை தூக்கிக்கொண்டு ஊர்வலமாக வந்து கொண்டிருக்க ஊர் மக்கள் எல்லோரும் மாரிக்கு பாத பூஜை செய்து ஆசீர்வாதம் வாங்குகின்றனர். 
முத்து பேச்சி வீட்டில் சண்முகத்துடன் பேசிக் கொண்டிருக்க அப்போது பாம் வைத்தவனை கூட்டிக்கொண்டு அவனது மனைவி இங்கே வருகிறாள். 

முத்து பேச்சியிடம் பணத்துக்காக ஆசைப்பட்டு பக்கத்து ஊரான சமயபுரம் கோவில் சிலையில் பாம் வைத்திருக்கிறார் என்ற விஷயத்தை சொல்ல இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் முத்துப்பேச்சி அவனைப் போட்டு அடி வெளுத்தெடுக்கிறார். அதன் பிறகு சமயபுரத்திற்கு செல்லும் முத்துப்பேச்சி பாமை ஆளிள்ளாத இடத்தில் தூக்கிப்போட்டு அனைவரின் உயிரையும் காப்பாற்றுகிறார். இதையடுத்து, மாரி மற்றும் அவளது கணவனை விருந்திற்காக வீட்டிற்கு அழைக்கிறார். அடுத்து நடக்கவிருப்பது என்ன? வாங்க பார்க்கலாம். 

மேலும் படிக்க | Santhosh Narayanan: “ஆல் ஏரியாலையும் ஐயா கில்லி..”கானா முதல் காதல் இசை வரை அனைத்திலும் கலக்கும் ச.நா!

Maari

இன்றைய எபிசோட்:

மாரி சீரியலின் இன்றைய எபிசோடில் முத்துப்பேச்சி மாரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் வீட்டிலிருந்து ஒருவர் போன் செய்து நம்ம வீட்டு பசுமாடு கண்ணு குட்டி போட்டு இருக்கு என விஷயத்தை சொல்ல முத்து பேச்சிக்கு குறி சொல்லும் பெண்மணி சொன்ன விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. 

அதன்பிறகு மாரியை பார்த்த சந்தோஷத்தோடு முத்து பேச்சி வீட்டிற்கு கிளம்பி வருகிறார். வீட்டிற்கு வந்த அவர் சீம் பாலை எடுத்துக்கொண்டு மீண்டும் மாரி வீட்டிற்கு வந்து பொதுவா இதெல்லாம் பொண்ணுங்க வீட்டுக்கு தான் கொடுத்து அனுப்புவாங்க எனக்கு நீயும் பொண்ணு மாதிரி தான் என சொல்லி பாலை கொடுக்க மாரியும் சந்தோஷமாக வாங்கிக் கொள்கிறாள். மேலும் இருவரையும் முத்துப்பேச்சி தன்னுடைய வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கிறார். 

கோவிலை திறக்கும் மாரி:

மறுநாள் மாரி மற்றும் சூர்யா முத்துப்பேச்சி வீட்டிற்கு கிளம்ப ஹாசினி இருவரையும் பைக்கில் சென்று வருமாறு சொல்லி பைக் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறாள். அப்படி இருவரும் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பேச்சி அம்மன் கோவில் அருகே பைக் ஆஃப் ஆகி நிற்கிறது. 

மாரி கையில் வைத்திருந்த ஒரு முக்கியமான டாக்குமெண்ட் பேப்பர் பறந்து சென்று கோவிலுக்குள் விழுகிறது. இந்த பேப்பரை எடுப்பதற்காக சூர்யா கோவிலின் கதவை உடைக்க மாரி கோவில் இப்படி பூட்டி இருக்க கூடாது என கோவில் முழுவதையும் சுத்தம் செய்து பக்கத்தில் இருந்து பூக்களை பறித்துக் கொண்டு வந்து மாலையாக தொடுத்து அம்மனுக்கு போட்டு பூஜை செய்கிறாள். 

Maari

மேலும் உங்க பேரு என்ன என்றெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் உங்க கோவிலை திறந்து சுத்தம் செய்து உங்களுக்கு பூஜை செய்த பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு என சொல்லி அங்கிருந்து கிளம்பி வெளியே வர பைக் ஸ்டார்ட் ஆகி விடுகிறது. பிறகு இருவரும் முத்துப்பேச்சி வீட்டிற்கு கிளம்புகின்றனர். 

இங்கே முத்து பேச்சி நேரம் ஆயிடுச்சு இன்னும் சூர்யாவும் மாரியும் வரவில்லை என காத்துக் கொண்டிருக்க அப்போது இருவரும் வந்து இறங்குகின்றனர். வந்த உடனேயே முத்து பேச்சியிடம் உங்களுக்காக ஸ்பெஷலான ஒன்றை கொண்டு வந்திருப்பதாக சொல்லி மாரி கோவிலில் பூஜை செய்த பூவை எடுத்து நீட்டுகிறாள். 

காணத்தவறாதீர்கள்…

யாரும் திறக்காத கோவிலை திறந்து வைத்த மாரிக்கு அடுத்து நிகழப்போவது என்ன? அவள் கோவிலை திறந்தது சரிதானா? போன்ற கேள்விகளுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது மாரி சீரியல். இந்நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: ஆல்பம் ஃபோட்டோவில் காத்திருந்த அதிர்ச்சி, சீதாவுக்கு சவால்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News