ரயில்வே ஸ்டேஷன் ஒன்று... ஆனால் மாநிலங்கள் இரண்டு... இந்தியாவின் வினோத ரயில் நிலையம்!

இந்திய இரயில்வே: இந்தியாவின் தனித்துவமான இரயில் நிலையம் இரண்டு மாநிலங்களில் அமைந்துள்ளது. ரயில் நிற்கும் போது, ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மறு பாதி  மற்றொரு மாநிலத்திலும் நிற்கும்.

1 /6

இந்தியாவில் இரயில் நிலையம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். ஆனால் அதில் வினோதமான ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த இரயில் நிலையம் இரண்டு மாநிலங்களில் அமைந்துள்ளது. இங்கே ரயில் நிற்கும் போது, ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மறு பாதி  மற்றொரு மாநிலத்திலும் நிற்கும்.  

2 /6

இந்த ரயில் நிலையம் பவானி மண்டி ரயில் நிலையம் ஆகும். இது மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு மாநிலங்களில் அமைந்துள்ளது. இந்தியாவின் தனித்துவமான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். பயணிகள் முதல் விரைவு மற்றும் சில அதிவிரைவு ரயில்கள் இங்கு நிற்கின்றன.

3 /6

ரயில் நிலையத்தில் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்ல பாலமும் உள்ளது. இங்கு இரண்டு நடைமேடைகள் மட்டுமே உள்ளன. இரு மாநில பயணிகளும் இங்கிருந்து பயணிக்கின்றனர்.

4 /6

இந்திய ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ரயில் நிலையம் குறித்த தகவலை வெளியிட்டு, இந்த ரயில் நிலையம் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் எல்லையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

5 /6

இரு மாநிலங்களில் இருந்தும் தினசரி வேலைக்காக, மக்கள் அதிகம் பயணம் செய்வதால், இந்த பவானி மண்டி நிலையத்தின் எப்போதும் கூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக, இரு மாநிலங்களின் கலாச்சார பகிர்வையும் இங்கே காணலாம்.

6 /6

பவானி மண்டி ரயில் நிலையம் ரயில் நிலையத்தில், ராஜஸ்தானின் பலகை ரயில் நிலையத்தின் ஒரு முனையிலும், மத்தியப் பிரதேச மாநிலத்தின் பலகை மறுமுனையிலும் நிறுவப்பட்டுள்ளன.