World War 1: முதலாம் உலகப்போரின் அரிய புகைப்படங்கள்!

மூன்றாம் உலகப் போரின் ஆரம்பிக்கலாம் என்பது போன்ற ஊகங்களை தொலைக்காட்சி சேனல்களிலும் செய்தித்தாள்களிலும் கேட்டிருக்கலாம். ஆனால் உலகப் போர் என்பது அவ்வளவு எளிதானதா? இந்தப் படங்கள் மூலம், முதல் உலகப்போர் குறித்த சில தகவல்களை அறிந்து கொள்ளலாம்

1 /6

1914 ஆம் ஆண்டு தொடங்கி முதலாம் உலகப் போரைப் பற்றி குறுகையில், போஸ்னியாவின் தலைநகரான சரேவோவில் ஆஸ்திரிய பேரரசரின் வாரிசான பேராயர் ஃபிரான்ஸ் ஃபிடெனாண்ட் படுகொலை செய்யப்பட்டதே அதன் உடனடி காரணம் என்று கூறப்படுகிறது. இந்த போர் வரலாற்றில் மிக மோசமான போர்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  

2 /6

முதலாம் உலகப் போரில் அமெரிக்கா $30 பில்லியனுக்கும் அதிகமாக செலவிட்டது. நவம்பர் 1918 வரை நடந்த இந்தப் போரில் 8,528,831 பேர் கொல்லபட்டனர். இந்தப் போர் முடிந்த பிறகுதான் உலகம் முழுவதும் ஸ்பானிஷ் காய்ச்சல் பரவியது.

3 /6

இந்த ஆபத்தான போரில், 13 லட்சம் இந்திய வீரர்களில், 62 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டனர், சுமார் 67 ஆயிரம் பேர் காயமடைந்தனர். இந்தியா 1,70,000 விலங்குகளையும் 37 லட்சம் டன் தானியங்களையும் போருக்கு அனுப்பியது.

4 /6

ஆஸ்திரியா, ஹங்கேரி, இத்தாலி, பல்கேரியா உள்ளிட்ட பிற நாடுகள் பங்கேற்ற மத்திய சக்தி ஜெர்மனியால் வழிநடத்தப்பட்டது. அதேசமயம் இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகள் நேச நாடுகளின் தரப்பிலிருந்து இணைந்தன. இந்தப் போரில் சுமார் 30 வகையான விஷ வாயுக்கள் பயன்படுத்தப்பட்டன.

5 /6

ஜெர்மனி அதிகாரப்பூர்வமாக 1918 நவம்பர் 11 அன்று சரணடைந்த பிறகு போர் முடிவுக்கு வந்தது. நவம்பர் 11 ஆம் தேதி முதல் உலகப் போரின் கடைசி நாள் என்று கூறப்படுகிறது.

6 /6

போரின் முடிவில், உலகின் 4 பெரிய பேரரசுகள் அழிந்தன. ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி (ஹாப்ஸ்பர்க்) மற்றும் உஸ்மானியா (உஸ்மானியப் பேரரசு) ஆகியவை முற்றிலும் அழிந்தன.