இது ஒரு அழகிய மழைக்காலம்: இணையவாசிகளை ஏங்க வைத்த வைரல் வீடியோ

Cute Viral Video: வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையவாசிகளின் இதயத்தை இளக வைத்துள்ளது. அவர்களை தங்கள் குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச்சென்றுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 4, 2022, 06:27 PM IST
  • மழைக்காலத்தில் நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒன்றாக சேர்ந்து மழையில் நனைந்து விளையாடிய காலம் நினைவிருக்கிறதா?
  • பேருக்காக குடையை பிடித்து, தொப்பாமாக நனைந்ததுண்டா?
  • நம்மில் பெரும்பாலான மக்களுக்கு இந்த அனுபவம் இருக்கும்.
இது ஒரு அழகிய மழைக்காலம்: இணையவாசிகளை ஏங்க வைத்த வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு நாள்தொறும் பலவித வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவற்றை பார்த்து நாம் நமது கவலைகளை மறந்து வேறு உலகுக்கு சென்று விடுகிறோம். 

உலகின் பல மூலைகளில் நடக்கும் சுவாரசியமான, சுவையான, வித்தியாசமான, விசித்திரமான நிகழ்வுகளை நாம் தினமும் சமூக வலைத்தளங்களில் காண்கிறோம். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

நம் அனைவரது வாழ்விலும் மிகவும் சந்தோஷமான பருவம் எது என கேட்டால், அது குழந்தைப் பருவம் என்றுதான் கூறுவோம். குழந்தைப் பருவத்தில் நாம் மிகவும் அன்பானவர்களாகவும், அப்பாவிகளாகவும் இருக்கிறோம். கல்மிஷமில்லாத உள்ளங்களுடம் உலா வருகிறோம்.

வாழ்க்கை நமக்கு அளிக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சியையும் இரு கை கொண்டு வாங்கிக்கொள்கிறோம். வாழ்க்கை வழங்கும் சிறிய விஷயங்களையும் அனுபவித்து மகிழ்ந்தோம். குழந்தை பருவ நண்பர்களை நம் வாழ்நாள் முழுவதும் நம்மால் மறக்க முடியாது. 

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு கிஸ் கொடுத்த பெண்: வைரலாகும் பாம்பின் மாஸ் ரியாக்‌ஷன்

மழைக்காலத்தில் நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒன்றாக சேர்ந்து மழையில் நனைந்து விளையாடிய காலம் நினைவிருக்கிறதா? பேருக்காக குடையை பிடித்து, தொப்பாமாக நனைந்ததுண்டா? நம்மில் பெரும்பாலான மக்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். 

இப்போது இதை நினைவுபடுத்தும் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. அழகிய ஒரு மழை நாளில், ஒரே குடையின் கீழ் பல குழந்தைகள் ஒன்றாக செல்வதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. இந்த வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது என்றே கூறலாம். 

வீடியோவில், 5-6 குழந்தைகள் மகிழ்ச்சியாக ஒரு குடையின் கீழ் தஞ்சம் அடைந்து, மழைக்கு மத்தியில், சாலையின் ஓரத்தில் தங்க முயல்கின்றனர். அவர்களில் மூவர் பள்ளிச் சீருடை அணிந்திருக்க, ஒரு சிறு பையன் எழுதும் ஸ்லேட்டைப் பிடித்துக்கொண்டு மிகவும் அப்பாவியாக புன்னகைக்கிறான். 

இந்த வீடியோ நெட்டிசன்களை ஏக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அனைவருக்கும் இந்த வீடியோ தங்களுடைய குழந்தைப் பருவ நாட்களை நினைவுபடுத்தியுள்ளது. இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரண் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

நம் குழந்தைப்பருவத்தை நினைத்து ஏங்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ வைரலாகியுள்ளது. 1.2 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் பலவித கமெண்டுகளும் இதற்கு கிடைத்துள்ளன. ஒரு பயனர், ‘குழந்தைப் பருவத்தில் வாழ்க்கை நன்றாக இருந்தது. ஒரு குடை, பல குழந்தைகள். நாம் ஒன்றாக படித்தோம்..ஒன்றாக விளையாடினோம்.. இந்த சந்தோஷம் நமக்கு எதிர்காலத்தில் கிடைக்காது என அப்போது நமக்கு தெரியாது” என்று எழுதியுள்ளார். 

மற்றொரு பயனர், ‘அவர்களின் முகத்தில் இருக்கும் அப்பாவித்தனம்... மகிழ்ச்சி... விலைமதிப்பற்றது….. இதுதான் குழந்தைப் பருவம் ... அக்கறையைப் பகிர்ந்துகொள்வது.. இங்கு புகார்கள் இல்லை... ஈகோ இல்லை...’ என்று எழுதியுள்ளார்.

மேலும் படிக்க | அமர்நாத்தைப் போலவே திரியம்பகேஸ்வர் கோவிலிலும் பனி லிங்கம்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News