இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டி சச்சின் டெண்டுல்கர் tweet!

சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய இப்படி ஆடி தான் பார்த்ததே இல்லை என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்!

Last Updated : Dec 7, 2018, 03:04 PM IST
இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டி சச்சின் டெண்டுல்கர் tweet! title=

சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய இப்படி ஆடி தான் பார்த்ததே இல்லை என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 191 ரன்கள் குவித்துள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியாவிற்கு பெரும் நெறுக்கடி கொடுத்த ஆஸ்திரேலியா அணி, தற்போது இந்திய வீரர்களின் பந்துவீச்சில் திணறி வருகின்றது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்ததில் "சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய இப்படி ஆடி தான் பார்த்ததே இல்லை" என பதிவிட்டுள்ளார்.

தற்போது நடைபெற்ற வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அஸ்வின் 3 விக்கெட், பூம்ரா மற்றும் இஷான்ட் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளை குவித்து ஆஸ்திரேலியா அணி வீரர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளனர். போட்டியில் ஆரம்பத்தில் ஆஸி., அணியின் கை ஓங்கியிருந்த நிலையில் தற்போது இந்தியாவின் கை ஓங்கியுள்ளது. இந்த நிலையினை இந்தியா விட்டுவிடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"இந்திய அணி தற்போது தன் பிடியை நழுவ விடக்கூடாது. இந்தச் சூழ்நிலையை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் தங்கள் சொந்த மண்ணில் இப்படிப்பட்ட தடுப்பு உத்தியுடன் ஆடி என் அனுபவத்தில் நான் கண்டதில்லை.

குறிப்பாக அஸ்வின் தன் திறமையினை இப்போட்டியின் பந்துவீச்சின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இப்போதைக்கு இந்திய அணியின் கை ஓங்கியிருக்க அஸ்வின் தான் முக்கிய காரணம்." என குறிப்பிட்டுள்ளார்.

Trending News