20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு விடைபெறுகிறாரா விராட் கோலி? இந்திய முன்னாள் கேப்டனின் ஆருடம்

20 ஓவர் உலக கோப்பைக்குப் பிறகு இந்திய அணியில் இருந்து விராட் கோலி விடைபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கபில்தேவ் மற்றும் சோயிப் அக்தர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 18, 2022, 09:04 AM IST
  • 20 ஓவர் உலக கோப்பை
  • பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா
  • விராட் கோலி எதிர்காலம் குறித்து ஆருடம்
20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு விடைபெறுகிறாரா விராட் கோலி? இந்திய முன்னாள் கேப்டனின் ஆருடம் title=

20 ஓவர் உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்டமாக தொடங்கியிருக்கிறது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கிரிக்கெட் உலகில் பரம எதிரிகளாக பார்க்கப்படும் இரு அணிகளின் போட்டியையும் காண கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கின்றனர். கடந்த 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி சொல்லி அடித்தது. ஆனால் இந்த முறை அப்படி இருக்கக்கூடாது என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான படை என்ன செய்யப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு சில மூத்த இந்திய வீரர்கள் தொடர்ந்து விளையாடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க | கடந்த ஒரு வருடமாக காயம் அடையாத இந்திய வீரர் யார் தெரியுமா?

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இப்போது வயது 34 வயதுக்கு மேல் ஆகிறது. அவர்கள் அடுத்த உலக கோப்பையில் விளையாடுவார்களா? அதுவரைக்கும் அவர்களுக்கு பிட்னஸ் இருக்குமா? என்ற கேள்வியை முன்னாள் வீரர்கள் வைத்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முதல் உலக கோப்பையை பெற்று கொடுத்தவருமான கபில்தேவ், விராட் கோலி குறித்து பேசும்போது 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு அவர் இந்திய அணியில் இருப்பது சந்தேகம் எனக் கூறியுள்ளார். சோயிப் அக்தர் பேசும்போது, தற்போது பார்முக்கு விராட் கோலி திரும்பியிருந்தாலும், 20 ஓவர் உலக கோப்பைக்குப் பிறகு அவர் இந்திய அணியில் தொடர்வார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என கூறியிருக்கிறார்.

ஆனால், இவர்களுக்கு கருத்துக்கு நேர் எதிராக விராட் கோலியின் இளமைகால பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறியிருக்கிறார். 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகும் விராட் கோலி தொடர்ந்து விளையாடுவார். அவருடைய பார்ம் மற்றும் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார். வரும் 23 ஆம் தேதி 20 ஓவர் உலக கோப்பையில் முதல் போட்டியில் களமிறங்குகிறது. அதில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. 

மேலும் படிக்க | T20 World cup: ஒரே ஓவரில் மேட்சை மாற்றிய ஷமி; விராட் கோலியின் அபார கேட்ச் - இந்தியா வெற்றி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News