டெல்டா பிளஸ் தொற்று பரவல்; தமிழகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை கடிதம்

டெல்டா பிளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 26, 2021, 09:38 AM IST
  • டெல்டா பிளஸ் வைரஸ் (திரிபு முதலில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வருவது கண்டறியப்பட்டது.
  • தற்போது தமிழகத்தில் ஒன்பது பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
  • இந்த வைரஸ் நுரையீரலை எளிதாக தாக்கக்கூடியது.
டெல்டா பிளஸ் தொற்று பரவல்; தமிழகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை கடிதம் title=

Delta Plus variant: கொரோனா வைரஸ் தொற்றின் டெல்டா பிளஸ் திரிபு (Delta Plus variant) குறித்த அச்சம் அனைவரது மனங்களையும் ஆக்கிரமித்து உள்ளது. இது குறித்த பல முன்னெச்சரிகை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது.

இந்த டெல்டா பிளஸ் வைரஸ் (Delta Plus Variant)  திரிபு முதலில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வருவது கண்டறியப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் ஒன்பது பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த வைரஸ் நுரையீரலை எளிதாக தாக்கக்கூடியது. இந்தியாவில் இதுவரை 48 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், மிக வேகமாக பரவும் டெல்டா பிளஸ் வகை கொரோனாவை (Corona Virus) கட்டுப்படுத்த உடனடியாக கடுமையான எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் ஒன்பது பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ALSO READ: New COVID-19 variant: புதிய டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டுபிடிப்பு
 
அந்த கடிதத்தில்,  டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ், மிக வேகமாக பரவும் என்பதோடு, நுரையீரலை கடுமையாக பாதித்து நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டது எனவும்,  எனவே, இதனை மேலும் பரவாமல் தடுக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார். 

சென்னை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறிய தீவிர பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும்  மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

ALSO READ |  COVID-19 Update: தமிழகத்தில் இன்று 5,755 பேர் பாதிப்பு, 150 பேர் உயிர் இழப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News