தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்: தயா அழகிரி நய்யாண்டி

Last Updated : Feb 6, 2017, 02:18 PM IST
தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்: தயா அழகிரி நய்யாண்டி  title=

தமிழக முதல்வராக சசிகலா அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பலவேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து அவர் கூடிய விரைவில் தமிழக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ளார். வரும் 7 அல்லது 9-ம் தேதி அவர் தமிழக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ளார். 

இந்நிலையில் அழகிரியின் மகன் தயா அழகிரியும் தன் டிவிட்டரில் நய்யாண்யோடு தமிழக அரசியல் பற்றி கிண்டலடித்துள்ளார்.

அதில்:- தமிழக மக்கள் ஒரு வழியில் அதிர்ஷ்டசாலிகள் தான். ஒரே ஒரு வாக்களித்துவிட்டு 3 முதல்வர்களை இதுவரை பார்த்துள்ளனர் என்று கிண்டலடித்துள்ளார். 

 

 

Trending News