பணம் கொடுப்பதால் வந்திருப்பார்! கமல் பற்றி பேசிய செல்லூர் ராஜூ!

படம் நடிப்பதைவிட பணம் அதிகமாக தருவதாக கூறி இருப்பார்கள் என்பதாலே அரசியலில் பிரச்சாரம் செய்ய கமலஹாசன் கால் சீட் கொடுத்திருப்பார் என செல்லூர் ராஜூ பேட்டி.  

Written by - RK Spark | Last Updated : Feb 19, 2023, 06:12 PM IST
  • எது மாதிரி இல்லாமல் புது மாதிரியாக ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளது.
  • ஜனநாயகம் வெல்லுமா பணநாயகம் வெல்லுமா என்பதை மக்கள் தான் கூற வேண்டும்.
  • ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு பணமழை பொழிகிறது.
பணம் கொடுப்பதால் வந்திருப்பார்! கமல் பற்றி பேசிய செல்லூர் ராஜூ! title=

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 75வது  பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடுவது குறித்து மதுரை காளவாசல் பகுதியில் உள்ள மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் K ராஜு தலைமையில்  ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.  தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;  ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் வித்தியாசமாக உள்ளனர். ஆளுங்க கட்சியினர் இதுவரை தொகுதிக்கு வந்தது இல்லை தற்போது அமைச்சர்கள் அதிக அளவில் இந்த தொகுதிக்கு வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டாலும் திமுக அமைச்சர்களே அதிக அளவில் இருக்கின்றனர்.  பிரச்சாரத்தின் போது திமுக அமைச்சருக்கு அப்பகுதியில் ஓட்டு இல்லை அவரிடம் ஓட்டு கேட்கும் அளவுக்கு முட்டாள் இல்லை. அவரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன்.

மேலும் படிக்க | முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக திகழ்கிறார் சிவன் - ஈஷா மகாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி!

ஈரோடு கல நிலவரம் சிறப்பாக உள்ளது. ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியான வைத்தியத்தை கிழக்குத் தொகுதி மக்கள் கொடுப்பார்கள் என நம்புகிறோம்.  ஜனநாயகம் வெல்லுமா பணநாயகம் வெல்லுமா என்பதை மக்கள் தான் கூற வேண்டும்.   எது மாதிரி இல்லாமல் புது மாதிரியாக ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளது.  புதிய கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு தருவது போல வாக்காளர்களை கவர்வதற்காக திமுக புதிய கண்டுபிடிப்புகளை செய்து வருகிறது.  திருமங்கலம் ஃபார்முலா அரவக்குறிச்சி ஃபார்முலா தற்போது ஈரோடு கிழக்கு புதிய ஃபார்முலா கொண்டு வருகின்றனர்.  மக்களை கூண்டுகள் அடைப்பது போல் அடைத்து ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களது வசதிக்கேற்ப உணவுகள் பணம் வழங்கி வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு பணமழை பொழிகிறது.  தேர்தல் ஆணையம் 14 இடங்களில் சீல் வைக்கின்றனர். ஒரு மணி நேரத்தில் திமுகவினர் மற்ற இடங்களில் கூடாரங்கள் அமைத்து அங்கு சென்று செயல்படுகின்றனர்.  சீல் வைப்பது தேர்தல் ஆணையம் கண்துடைப்பு போல் நடத்துகிறது. அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.  கமலஹாசனின் கொள்கை பணத்திற்கானது மட்டும். கமலஹாசன் விளம்பரத்திற்காகவும் பணத்திற்காகவும் நடிக்கிறார்.  படம் நடிப்பதை விட பணம் அதிகமாக தருவதாக கூறி இருப்பார்கள் அதனால் கால் சீட் இங்கு கொடுத்திருப்பார்.  கமலஹாசனை மக்கள் அரசியல்வாதியாக பார்ப்பது இல்லை அவர் உலக நாயகன் நல்ல நடிகர் ஆகவே பார்க்கின்றனர்.

கமலஹாசனை மக்கள் ரசித்து பார்ப்பார்கள் அவருடைய பேச்சை கேட்டால் ஓட்டு போடுபவர்களும் போட மாட்டார்கள்.  கமலஹாசன் பேச தெரியாது பேசினாலும் மக்களுக்கும் புரியாது.  திமுக நேற்று வந்த கட்சி இல்லை ஆட்களை பார்த்து யாரை எப்படி ஆஃப் செய்ய வேண்டும் என்பது தெரியும். கமலஹாசனை எந்த வகையில் ஆப் செய்தார்கள் என தெரியவில்லை.  எங்களைப் பொருத்தவரை ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்த வேண்டும் என நினைக்கிறோம் ஆனால் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும்.  தேர்தல் ஆணையம் இப்பொழுதாவது விழித்துக் கொண்டு ஆளுங்கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அமைச்சர்கள் சட்டத்திற்கு புறம்பாக செய்யும் செயலை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | நெல் கொள்முதலில் கையூட்டா? 90 பேரை பணி நீக்கம் செய்த தமிழ்நாடு அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News