முதுமலை சாலையில் யானைகளை இடையூறு செய்யும் விதமாக வாகனங்களை நிறுத்தி புகைப்படம் வீடியோ எடுக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நெல்லையப்பர் கோவில் முன்பு ஏற்றப்பட்ட தேசியக் கொடிக்கு கோவில் யானை காந்திமதி தும்பிக்கையை உயர்த்தி, பிளிறி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது.
கோவை அருகே வீட்டின் வாயிற்கதவைத் திறந்து உள்ளே நுழைந்த காட்டு யானை ஓன்று சுற்றுச்சுவரை இடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே, குமுளி நோக்கி வந்த அரசு பேருந்து கவி வன சாலை வழியாக வரும் போது, அதனை வழி மறித்து துரத்திய காட்டு யானை; ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை பின்னோக்கி இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. யானை வன பகுதிக்குள் சென்ற பிறகு பேருந்தை எடுத்து விரைந்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றில் குட்டி யானை ஒன்று விழுந்தது. அப்போது, தாய் யானை கிணற்றை விட்டு செல்லாமல் வட்டமடித்து நின்ற நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பின் தானே தனது குட்டியை மீட்டுக்கொண்டு வன பகுதிக்குள் சென்றது.
களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் அட்டகாசம் செய்து வரும் ஒற்றை காட்டு யானையை வனத்துக்குள் விரட்டியடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.