நீட் தேர்வு தோல்வி பயம் - மாணவி தற்கொலை

நீர் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் தென்காசி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 2, 2022, 09:36 AM IST
  • நீட் முடிவுகள் விரைவில் வெளியாகின்றன
  • தோல்வி பயத்தால் மாணவி தற்கொலை
  • இவர் தென்காசியை சேர்ந்தவர்
 நீட் தேர்வு தோல்வி பயம் - மாணவி தற்கொலை title=

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே குலசேகரமங்கலம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 54), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வெண்ணியார் (48). இவர்களுக்கு ராஜலட்சுமி (21) என்ற மகளும், உதயஜோதி (19) என்ற மகனும் உண்டு.  ராஜலட்சுமி பிளஸ்-2 படித்துவிட்டு, மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த 2ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதினார். இதில் அவர் தோல்வி அடைந்ததால், சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து மூன்றாவது முறையாக மீண்டும் நீட் தேர்வு எழுதினார். 

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வருகிற 7ஆம் தேதி வெளியாக உள்ளன. இதையொட்டி நீட் தேர்வுக்கான கீ விடைகளும் இணையதளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. இதையடுத்து நீட் தேர்வுக்கான விடைகளை ராஜலட்சுமி இணையதளத்தில் பார்த்தார். 

பின்னர் அவர், தோல்வி அடைந்துவிடுவேன் என்றும், தனது மருத்துவ கனவு சிதைந்து போனதாகவும் குடும்பத்தினரிடம் கூறி வேதனை அடைந்தார். இதையடுத்து ராஜலட்சுமியை பெற்றோர் சமாதானப்படுத்தினர். இந்த நிலையில்  ராஜலட்சுமியின் பெற்றோர் வழக்கம்போல் அப்பகுதியில் உள்ள வயலுக்கு சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ராஜலட்சுமி திடீரென்று தாயாரின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வீட்டுக்கு திரும்பி வந்த பெற்றோர் தங்களுடைய மகள் ராஜலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். 

மேலும் படிக்க | போதைப்பொருளை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: பொன்முடி குற்றச்சாட்டு

இதுகுறித்து சேர்ந்தமரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று  இறந்த ராஜலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | NCRB 2021: தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் அதிகரிப்பு; கடுமையான நடவடிக்கை தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News