சிக்கலில் மைக்ரோசாஃப்ட்... விமான சேவை முதல் வங்கிகள் வரை... அனைத்தும் முடங்கும் அபாயம்..!!

இணைய பாதுகாப்பு கம்பெனியான கிரவுட்ஸ்டிரைக்கில் ஏற்பட்ட பாதிப்பு ஒன்றின் காரணமாக மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சிக்கலில் உள்ளதால், உலகின் பெரும்பாலான வங்கிகள், செய்தி நிறுவனங்கள், ஐடி துறை என அனைத்தும் முடங்கியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 19, 2024, 03:08 PM IST
  • தொழில்நுட்ப கோளாறு காரணமாக மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சிக்கலில் உள்ளது.
  • பல்வேறு விமான நிறுவனங்களின் சேவைகள் முடக்கி, விமானங்களை ரத்து செய்யும் அளவிற்கு பாதித்துள்ளது.
  • விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் கைகளால் எழுதிக்கொடுக்கப்பட்டு வருகிறது.
சிக்கலில் மைக்ரோசாஃப்ட்... விமான சேவை முதல் வங்கிகள் வரை... அனைத்தும் முடங்கும் அபாயம்..!! title=

இணைய பாதுகாப்பு கம்பெனியான கிரவுட்ஸ்டிரைக்கில் ( CrowdStrike) ஏற்பட்ட பாதிப்பு ஒன்றின் காரணமாக மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சிக்கலில் உள்ளதால், உலகின் பெரும்பாலான வங்கிகள், செய்தி நிறுவனங்கள், ஐடி துறை என அனைத்தும் முடங்கியுள்ளது. அமெரிக்காவின் 911 சேவை, லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்ட பல முக்கிய தளங்கள் முடங்கியிருக்கின்றன.

உலக அளவில் வர்த்தம், போக்குவரத்து, ஐடி, செய்திகள் என பல துறைகளில் கணிணி பயன்பாடு தான் ஆதாரமாக இருக்கிறது. கணிகளில் விண்டோஸ்தான் இயங்குதளமாக இருக்கும் நிலையில், அதனை உபயோகப்படுத்தும் பலருக்கும் BSOD என்னும் BLUE SCREEN OF DEATH என்னும் திரை தோன்றியுள்ளது. கணிணியில் எதையுமே நம்மால் இயக்க முடியாது என்பதே இதன் பொருள். விண்டோஸ் மென்பொருளின் பாதுகாப்பினை உறுதி செய்துவரும் சைபர் பாதுகாப்பு தளமான ஃபேல்கன் சென்சாரில் ஏற்பட்ட சிக்கல் தான் இது பிரச்சனைக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

பலர் தங்கள் லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் ரீஸ்டார்ட் அம்சத்தில் சிக்கியிருப்பதை எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த பிரச்சனை, அமெரிக்காவில் பல்வேறு விமான நிறூவனங்களின் சேவைகள் முடக்கி, விமானங்களை ரத்து செய்யும் அளவிற்கு பாதித்துள்ளது.இந்தியாவில், இண்டிகோ, ஆகாசா மற்றும் ஸ்பைஸ்ஜெட்  விமான நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | மழைக்காலத்தில் ஸ்மார்ட்போனை பாதுகாக்க செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்...

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் முடங்கியிருப்பதால், உள்ளூர் விமானங்களில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகளுக்கு கோவா உள்ளிட்ட விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் கைகளால் எழுதிக்கொடுக்கப்பட்டு வருகிறது.சென்னை விமான நிலையத்தின் கம்யூட்டர் சர்வர்களில் ஏற்பட்ட பிரச்னையால் 27 விமானங்கள்ளின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்ப சிக்கலை கிரவுட்ஸ்டிரைக் நிறுவனத்த்ன் தொழில்நுட்ப நிபுணர்கள் கண்டறிந்துவிட்டதாகவும், அதனை சரி செய்ய தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் கிரவுட்ஸ்டிரைக்  கூறியுள்ளது. ஆனாலும், சிக்கல் தீர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என தெரியவில்லை. சில மணி நேரத்திற்கு இயங்கவில்லை என்றாலும், உலக அளவில் இது மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | வந்தாச்சு வாட்ஸ்அப்பின் லேட்டஸ் அப்டேட்! இனிமேல் இன்னும் ஸ்மார்ட்டாய் புகைப்படத்தை பார்க்கலாமே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News