அமைச்சர் பேச்சு முக்கியமா ? சாப்பாடு முக்கியமா ? பிரியாணிக்காக அமைச்சர் மூர்த்தி பேசும்போதே கூட்டத்தை புறக்கணித்து பிரியாணி சாப்பிட ஒடிய திமுக தொண்டர்கள்.
கமல் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த துணை நடிகர் மோகன் வறுமையினால் அவதிப்பட்டு உயிரிழந்தார். பட வாய்ப்புகள் இல்லாமல் பாதிக்கப்பட்ட அவர், யாருமின்றி சாலையில் ஆதரவற்ற நிலையில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கேப்பை மாவு புட்டு சாப்பிட்ட 5 வயது குழந்தை உட்பட 10 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படிப்பு மட்டுமே யாரும் திருட முடியாத நிலையான சொத்து என தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவ மாணவிகள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரையில் உலகத்தரத்துடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிய தொழில்நுட்பத்தில் வைக்கப்பட்டுள்ள திரையில் கலைஞர் கருணாநிதியுடன் பேசி மகிழ்ந்தார்.
மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீரர் அழகுமுத்துகோன் மணிமண்டபத்தில் 313ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வந்தவர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
மக்கள் போட்ட பிச்சையால் பதவியில் இருக்கும் திமுக அமைச்சர்கள் வாய்க்கொழுப்பில் பேசிக் கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மோடியின் ஜால்ராக்கள் தான் அவர் நாட்டிற்கு அதை செய்தார் இதை செய்தார் என்று கூறுகிறார்கள். உண்மையில் மோடி நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை - மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.