பேத்திக்கு பாலியல் தொல்லை புகார் - துப்பாக்கியால் சுட்டு முன்னாள் அமைச்சர் தற்கொலை

தனது பேத்திக்கு பாலியல் தொல்லை தந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் அவமானம் தாங்காமல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : May 28, 2022, 02:11 PM IST
  • மருமகள் வீண் பழி சுமத்தியதால் மாமனார் தற்கொலை
  • மாடியில் நின்று தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்த முன்னாள் அமைச்சர்
பேத்திக்கு பாலியல் தொல்லை புகார் - துப்பாக்கியால் சுட்டு முன்னாள் அமைச்சர் தற்கொலை title=

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர பகுகுணா (வயது 59) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆவார். இவர், கடந்த 2004-2005-ம் ஆண்டில் என்.டி.திவாரி தலைமையிலான அரசவையில் அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் அவர் தனது மகன் அஜய் பகுகுணா, மருமகள், பேத்தியுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ராஜேந்திர பகுகுணாவின் மருமகள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார். தனது மகளுக்கு மாமனார் ராஜேந்திர பகுகுணா பாலியல் ரீதியாக தொல்லை தந்துள்ளார் என புகார் ஒன்றை பதிவு செய்திருந்தார்.

இதையடுத்து ராஜேந்திர பகுகுணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீஸார், அவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

rajendra bahuguna

இதனால் அவமானம் அடைந்ததாக கருதிய அவர், நேற்று தனது வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்றுக்கொண்டிருந்தார். மேலும் அவரிடம் துப்பாக்கி ஒன்று இருந்ததும் தெரிய வந்தது.

இதனுடன், போலீஸாருக்கு தனது செல்போனில் இருந்து போன் செய்து தான் ஒரு நிரபராதி என்றும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தன் மீது அபாண்டமாக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

பின்னர் இந்த பொய் புகாரினால் தனக்கு மானபங்கம் ஏற்பட்டதாக தெரிவித்த அவர், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.

இதைக்கேட்ட போலீஸார் உடனடியாக அவரது இல்லத்திற்கு வந்தனர். மேலும் ஒலிப்பெருக்கி மூலம் பேசி அவரை சமாதானம் செய்ய முயன்றனர்.

ஆனால் அவர் போலீஸாரின் சமாதான பேச்சு வார்த்தைக்கு இணங்காமல் தனது கையில் இருந்த துப்பாக்கியை தன் மார்பை குறிவைத்து சுட்டுக்கொண்டார். 

சில வினாடிகளில் அவரது தோட்டா நுழைந்த துளையில் இருந்து ரத்தபோக்கு ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து உயிரிழந்தார். இவரது தற்கொலையை அங்கு திரண்ட மக்கள், போலீஸார், குடும்பத்தார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

மேலும் படிக்க | கட்டிப்புடி வைத்தியம் செய்யும் காதல் பாம்புகள்: வைரலாகும் பாம்புகளின் ரொமான்ஸ்

rajendra bahuguna

பின்னர், போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ராஜேந்திர பகுகுணாவின் மகன் அஜய் கூறும்போது, தனக்கும் தன் மனைவிக்கும் பலமுறை சண்டை மூண்டுள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் வீட்டில் பிரச்சனை எழுந்ததாகவும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | இது பாம்புகளின் மரம் பிடிக்கும் சண்டை: வைரலாகும் ஆதிக்கப் போர்

மேலும் அவரது மனைவி மிகவும் அபாண்டமாக பொய் புகார் கூறியதாகவும், அவரது தந்தை அப்பழுக்கில்லாதவர் என்றும் தெரிவித்தார். தன் மீது உள்ள கோபத்தாலும், பணம் பறிக்கும் நோக்கத்தாலும் இவ்வாறான குற்றச்சாட்டை தனது மனைவி தன் தந்தை மீது வைத்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, மருமகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | சமையல்காரரின் கைவண்ணத்தில் வைரலாகும் பாம்பு வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News