காங்., சார்பில் நாடு தழுவிய பாரத் பந்த்: களத்தில் ராகுல்காந்தி...!

டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக காங். தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணி...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2018, 09:49 AM IST
காங்., சார்பில் நாடு தழுவிய பாரத் பந்த்: களத்தில் ராகுல்காந்தி...!  title=

டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக காங். தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணி...! 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தது.

இதனையொட்டி, புவனேஸ்வர் மற்றும் ஒடிசாவில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அசாம் மாநிலம், கவுகாத்தியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல், தலைநகர் டெல்லி, சண்டிகரில், கர்நாடக மாநிலம் புவனேஸ்வர் உள்ளிட்ட பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவனந்தபுரத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதையடுத்து, டெல்லியில் பாரத் பந்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது. 

 

Trending News