பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் போலீஸ் கீழ்த்தரமான கேள்வி

கேரளாவில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் கீழ்த்தரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். 

Last Updated : Nov 3, 2016, 04:20 PM IST
பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் போலீஸ் கீழ்த்தரமான கேள்வி title=

திருவனந்தபுரம்: கேரளாவில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் கீழ்த்தரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். 

கேரளாவில் உள்ள ஒரு பெண்ணின் கணவரின் நண்பர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்து அந்த பெண்ணிடம் கொடூரமான கேள்விகளை எழுப்பி உள்ளனர். போலீஸ் அதிகாரி உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்தது யார்? என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேள்வி கேட்டார். இவ்விவகாரத்தை பிரபல மலையாள டப்பிங் ஆர்டிஸ்ட் பாக்ய லட்சுமி தனது பேஸ்புக் தளத்தில் வெளியிட்டு வந்துஉள்ளார். 

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரின் நண்பர்கள் அவரது கணவருக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று பெண்ணை ஏமாற்றி காரில் அழைத்து சென்று அந்த பெண்னண பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவருடைய கணவர் கொடுத்த தைரியத்தில் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் அவரை மிகவும் காயம் அடைய செய்து விட்டது.

Trending News