கல்லூரி பேருந்து விபத்தில் பேராசிரியர் உட்பட 6 பேர் பலி

ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பேருந்து மீது லாரி மோதியதில் பேராசிரியர் உட்பட 6 கல்லூரி மாணவர்கள் பலி!

Last Updated : Jun 11, 2018, 11:27 AM IST
கல்லூரி பேருந்து விபத்தில் பேராசிரியர் உட்பட 6 பேர் பலி title=

ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பேருந்து மீது லாரி மோதியதில் பேராசிரியர் உட்பட 6 கல்லூரி மாணவர்கள் பலி!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாந்த் கபீர் நகர் பகுதியில் இருந்து கல்லூரி மாணவர்கள் இரண்டு பேருந்துகளின் மூலம் ஹரித்வார் நோக்கி சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் ஒரு பேருந்து எரிபொருள் இன்றி பாதியிலேயே நிற்றுள்ளது.

இதை தொடர்ந்து, பேருந்தில் இருந்த மாணவர்கள், மற்றொரு பேருந்தில் இருந்து சிறிது எரிபொருள் எடுத்து அதன் மூலம் பெட்ரோல் பங்க் வரை செல்ல திட்டமிட்டு, பேருந்தை விட்டு கீழே இறங்கியுள்ளனர். அப்போது, அந்த வழியே அதிவேகமாக வந்த பேருந்து மாணவர்கள் மீது மோதியது. 

இந்த விபத்தில் பேராசிரியர் உட்பட 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 மாணவர்கள் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்துகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Trending News