சகல சௌபாக்கியங்களையும் அள்ளித் தரும் வருதினி ஏகாதசி விரதம்

ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால், மனித மனம் தூய்மை அடைகிறது, மனதில் உள்ள கோபம், வெறுப்பு, குழப்பம் ஆகியவை விலகி எண்ணங்கள் தூய்மை அடைகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 25, 2022, 06:18 PM IST
சகல சௌபாக்கியங்களையும் அள்ளித் தரும் வருதினி ஏகாதசி விரதம் title=

இந்து மதத்தில், பல விதமான விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன என்றாலும், ஏகாதசி விரதத்துக்கு தனி சிறப்பு உண்டு. வைகாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி வருதினி ஏகாதசி என்று அழைக்கபடுகிறது. வருதினி ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறக்கும். சகல சவுபாக்யங்களையும் அடையலாம்.

ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால், மனித மனம் தூய்மை அடைகிறது, மனதில் உள்ள கோபம், வெறுப்பு, குழப்பம் ஆகியவை விலகி எண்ணங்கள் தூய்மை அடைகின்றன. நாம் செய்த பாவங்கள் விலகி, வாழ்க்கையில் ஏற்றத்தை காணலாம். மனதை ஒருநிலைப்படுத்தி நாள் முழுவதும் விரதமிருப்பது மிகவும் விசேஷமானது.

ஏகாதசி விரதம் இருக்கும் நாளில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று  துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபட வேண்டும்.

ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகளுடன் கூடவே, மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும். அன்று முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. எனினும், உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், உப்பு சேர்க்காத எளிமையான உணவுகள், சுவாமிக்கு நிவேதனம் செய்த பழங்களை சாப்பிடலாம். அவ்வப்போது தாகம் தீர்க்க தண்ணீரும் குடிக்கலாம்.

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி 2022: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. காலி வயிற்றில் தண்ணீர் குடுக்கும் போது அது வயிற்றையும் சுத்தமாக்குகிறது.

விரதத்தின் போது பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து கடவுள் சிந்தனையுடன் இருக்க வேண்டும். மகா விஷ்ணு குறித்த ஸ்தோத்திரங்களை கூறுவதும், பாடல்கள் இசைபப்தும் மனதிற்கு பெரும் நிம்மதியைத் தரும். 

 ஏகாதசி விரத்தின் மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்து விட்டு, ஏழைகளுக்கு அன்னதானம் அளித்த பிறகு, அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவு அருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்துவது மிகவும் சிறப்பு. 

கேளிக்கை அல்லது விருந்து போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.  ஏகாதசி விரத தினத்தன்று விரதம் இருப்பவர் மட்டுமல்லாது, வீட்டிலிருப்பவர்களும் மது அருந்துதல், புலால் உணவுகள் சாப்பிடுதல் போன்றவற்றை தவிர்ப்பது சிறப்பான பலன்களை தரும். 

மேலும் படிக்க | ஏழரை சனியிலும் சனிபகவானின் அருளை பெற ‘இவற்றை’ செய்யுங்கள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News